திருப்பூர், ஜூலை 20- பிஎப் பணம் முறையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தாராபுரம் குறைதீர் கூட்டத்தில் தூய் மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தாராபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குறைதீர் கூட்டம் வெள்ளி யன்று நகராட்சி அலுவல கத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை வகித் தார். இதில், அவர் பேசுகையில், தாராபுரம் நக ராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படு கிறது. மேலும், ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்ப டுகிறாதா என்பது குறித்து நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார். இதையடுத்து, பிஎப் பணம் முறையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் உறுதியளித்தார். இதையடுத்து கையுறை, பாதுகாப்பு ஆடை இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணை யர் திருமால் செல்வம், நகராட்சி சுகாதார அலு வலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் கள் செல்வகுமார், செந்தில் பாண்டி, ரத்தினகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.