சிபிஎம் அகில இந்திய மாநாடு: மார்ச் 12 இல் சிறப்பு கருத்தரங்கம்
சிபிஎம் அகில இந்திய மாநாடு: மார்ச் 12 இல் சிறப்பு கருத்தரங்கம் தருமபுரி, பிப்.6- மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை முன் னிட்டு, தருமபுரியில் மார்ச் 12 ஆம் தேதியன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் தருமபுரி மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டத்தை உடன டியாக நிறைவேற்ற வேண்டும். தருமபுரி நகராட்சியிலும், பேரூராட்சிகளிலும் இணைப்பதற்கு முன், அருகிலுள்ள ஊராட்சி மக்களின் கருத்தறிந்து செயல்பட வேண்டும். மிட்டா கோம்பேரி - காளிக்கரம்பு சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வரு கிறது. இச்சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளித் துள்ளதாக தெரிய வருகிறது. உடனடியாக சாலை அமைக் கும் பணியை தொடங்க வேண்டும். கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி மார்ச் 12 ஆம் தேதியன்று தருமபுரி யில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இக்கருத்த ரங்கில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் விஜு கிருஷ் ணன், உ.வாசுகி ஆகியோர் பங்கேற்கின்றனர் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
பெண் கொலை: ஒருவர் கைது
பெண் கொலை: ஒருவர் கைது நாமக்கல், பிப்.6- பெண்ணை இருசக்கர வாகனத்திலிருந்து தள்ளிவிட்ட பேரூராட்சி பணியாளரை காவல் துறையினர் கைது செய்த னர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பரமத்தி, மாவுரெட்டி நத்தமேடு பகுதியைச் சேர்ந்த சீனி வாசன் என்பவரின் மனைவி மணிமேகலை (32). இவர் செல்போனில் பேசிவிட்டு வருவதாக வெளியே சென்ற மணிமேகலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், மாவுரெட்டியிலிருந்து மாதேசம்பாளையம் செல்லும் சாலையில் மணிமேகலை மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் மணிமேகலை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இகுறித்த புகாரின்பேரில், பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மணிமேகலையிடம் கடை சியாக செல்போனில் பேசிய நபர் ஈரோடு மாவட்டம், கொடு முடி அருகே உள்ள கோம்புபாளையத்தைச் சேர்ந்த உதய குமார் (33) என்பதும், அவர் பரமத்தி பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யும் பிரிவில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மணி மேகலையுடன் நீண்ட கால நட்பு இருந்ததாகவும், இருவ ரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அவரை கீழே தள்ளியதாகவும், கீழே விழுந்த தில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில், அவர் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவித்தார். இதை யடுத்து அவரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
வீட்டிலிருந்து 15 கி.மீ.க்குள் பொதுத்தேர்வு பணி வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
தருமபுரி, பிப்.6- தங்களது வீட்டிலிருந்து 15 கிலோ மீட்ட ருக்குள் பொதுத்தேர்வுக்கான பணி வழங்க வேண்டும், என பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முது நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா விடம் வியாதுனன்று கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், நடப்பாண்டில் நடக்கவிருக்கும் அனைத்து பொதுத்தேர்வு பணிக்கு, பணி ஒதுக்கீடு செய்யும் முன் சீனியா ரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும். வீட்டு முகவரியை முன்னிலைப்படுத்தியும், 15 கிலோ மீட்டர் துாரத்திற்குள் பணிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். எம்.வி.ஓ., பணிக்கு அந் தந்த பாடத்தில் மூத்த ஆசிரியர்களை பயன்ப டுத்த வேண்டும். செய்முறை தேர்வு பணிக்கு, சில குறிப்பிட்ட ஆசிரியர்களே தனியார் பள்ளிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கைக்குழந்தை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோய்வாய் பட்டவர்கள், ஓய்வு பெற்று தொடர் பணியில் இருப்பவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தருமபுரி மற் றும் அரூர் மதிப்பீட்டு மையத்தில், மதிப்பீடு செய்ய விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்க ளுக்கு துாரத்தை அடிப்படையாக கொண்டு, அவர்கள் விருப்பம் தெரிவிக்கும் மையத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும், என வலியு றுத்தப்பட்டுள்ளது.
நாராயணசாமி நாயுடு பிறந்த தினம்
அமைச்சர் புகழாரம் கோவை, பிப்.6- உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழாவில், அமைச்சர் கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். உழவர் பெருந்தலைவர் சி.நாராயண சாமி நாயுடுவின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை, வையம் பாளையத் தில் அமைந்துள்ள அவரின் மணிமண்டபத் தில் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு, தமி ழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் வியாழனன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். இந்நிகழ்வில், அமைச்சர் சாமிநாதன் நிகழ்ச்சி பேசுகையில், ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க தனது இறுதி மூச்சு வரை விவசாயிகளுக்கு குரல் கொடுத்தவர். தன்னு டைய ஆளுமை திறனால் விவசாய சங் கத்தை வலுவடைய செய்தார். விவசாயி களை ஒன்று திரட்டி, பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து அதை நிறைவேற செய்த வர், என்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநா யகி, நாராயணசாமி நாயுடு அவர்களின் குடும் பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்ஜெட் நகலைக் கிழித்து தொழிற்சங்கங்கள் போராட்டம்
திருப்பூர், பிப்.6 - ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து வியாழ னன்று திருப்பூர் புதிய பேருந்து நிலை யத்தின் முன்பு தொழிற்சங்கத்தினர் பட்ஜெட் நகலை கிழித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், சாமானிய மக்க ளுக்கு சாதகமான திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் விரோத பட்ஜெட்டாக உள்ளது. இந்த தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத பட்ஜெட்டை கிழித்து போராட போவ தாக அனைத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி வியாழனன்று எம்.எல்.எப் மாவட்டச் செயலாளர் மு.சம்பத் தலை மையில் புதிய பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் பட் ஜெட் நகலைக் கிழித்துப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் பி.ஆர்.நட ராஜன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா ளர் அ.சிவசாமி, எல்பிஎப் மாவட்டச் செயலாளர் ரங்கசாமி, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துசாமி ஆகியோர் பட்ஜெட்டை கண்டித்துப் பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி, கட்டுமான சம்மேளன மாநிலச் செயலாளர் டி.குமார், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜி.சம்பத், மாவட்ட துணைத் தலைவர்கள் கே.உண்ணி கிருஷ்ணன், பி.பாலன் உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினர் திரளா னோர் பங்கேற்று பட்ஜெட் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியவர்கள் மீது நடவடிக்கை
வனப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியவர்கள் மீது நடவடிக்கை உதகை, பிப்.6- குந்தா வனப்பகுதியில் கூடாரம் அமைப்பு சட்டவிரோத மாக தங்கிய 3 வாலிபர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரி மாவட் டம் நிர்வாக வசதிக்காக முதுமலை புலிகள் காப்பகம், முக் குறுத்தி தேசிய பூங்கா, கூடலூர் மற்றும் நீலகிரி வனக்கோட் டங்கள் என்று பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் நீலகிரி வன கோட்டத்தில் உதகை வடக்கு, தெற்கு, குந்தா, கோரகுந்தா, நடுவட்டம், பார்சன்ஸ்வேலி, பைக்காரா, குன்னூர், கோத்த கிரி, கட்டபெட்டு உள்ளிட்ட 13 வனச்சரகங்கள் உள்ளன. வன விலங்குகள் பாதுகாப்பு, அடையாளம் தெரியாத நபர்கள் நட மாட்டம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் வனப் பகுதிக்கு ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் குந்தா வனச்சரகம் தாய்சோலை பிரிவு, பிக் கட்டி காவல் பகுதிக்குட்பட்ட குந்தா காப்பு காட்டு பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே கூடாரம் (டென்ட்) அமைக் கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வியாழனன்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், மஞ்சூர் கரியமலையை சேர்ந்த கோகுல் கண்ணன் (30), தாய் சோலை எஸ்டேட்டை சேர்ந்த ரித்திக் (23), எடக்காடு பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (27) ஆகிய 3 பேரும் பாலித் தீன் பேப்பரால் கூடாரம் அமைத்து, அங்கு இருந்த விறகு களை கொண்டு நெருப்பு பற்ற வைத்து குளிர் காய்ந்து இரவு அங்கேயே தங்கி இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் 3 பேருக்கும் தலா ரூ.10,000 வீதம், ரூ.30,000 அபராதம் விதிக் கப்பட்டது. மேலும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையில் சுண்ணாம்பு படிவங்களை அகற்றும் பணி
மேட்டூர் அணையில் சுண்ணாம்பு படிவங்களை அகற்றும் பணி சேலம், பிப்.6- மேட்டூர் அணையின் கசிவுநீர் துவாரங்களில் சுண் ணாம்பு படிவங்களை அகற்றும் பணி ரூ.50 லட்சம் மதிப்பில் தொடங்கியது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி இருக்கும்போது அணைச் சுவற்றில் நீர்கசிவு ஏற்படும். இந்த நீர்கசிவு வெளிப்புற சுவர்களுக்குள் செல்லாமல் கசிவுநீர் துவாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, அணையின் ஆய்வு சுரங் கப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து கசிவு நீர் கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. கசிவுநீர் நிர் ணயித்த அளவைவிட அதிகரித்தால் அப்போது அணை யைப் பலப்படுத்தும் பணி நடைபெறும். மேட்டூர் அணையில் 153 கசிவுநீர் துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த துவா ரங்களில் சுண்ணாம்பு படிவங்கள் படிந்திருந்தால் கசிவு நீர் வெளியேறுவது தடைபடும். ஆகவே இதனை ஆய்வு செய்து அகற்றி, சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு கசிவுநீர் துவாரங்களில் இருந்து சுண் ணாம்பு படிவங்கள் அகற்றப்பட்டன. அணை பாதுகாப்பு நிபு ணர் குழு 2018 ஆம் ஆண்டு ஆய்வுக்கு பிறகு கசிவுநீர் துவாரங்களில் படிந்திருக்கும் சுண்ணாம்பு படிவங்களை அகற்ற பரிந்துரை செய்தது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கசிவுநீா் துளைகளில் படிந் துள்ள சுண்ணாம்பு படிவங்களை அகற்றும் பணி நடை பெற்று வருகிறது. இப்பணிகள் மூன்று மாதங்கள் நடைபெ றும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்ஸ்ட்டாவில் அவதூறு - கைது
இன்ஸ்ட்டாவில் அவதூறு - கைது கோவை, பிப்.6- கோவையில் 15 போலி இன்ஸ்ட்டாகிராம் கணக்குகளை துவங்கி அவதூறாக பதிவிட்ட நபரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விமல் குமார் என்பவரும் கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் விமல்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி பேசுவதை தவிர்த்தார். மாணவி அவ ருடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த விமல் குமார், போலியாக 15 இன்ஸ்ட்டாகிராம் கணக்குகளை துவங்கி அதில் மாணவி குறித்து தொடர்ந்து அவதூறாக பதி விட்டு வந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விமல் குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் குழுவில் ஒருவர் விடுவிப்பு
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் குழுவில் ஒருவர் விடுவிப்பு கோவை, பிப்.6- கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புக் குழுவில் உள்ள முனைவர் லைவ்லீனா லிட்டில் பிளவர் என்பவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழகம் புத னன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த 2022 இல் இருந்து தற்போது வரை துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. இதனால், பல்கலைகழக சமூக நலப்பணித் துறை தலைவர் முனைவர் லைவ்லீனா லிட்டில் பிளவர் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய துணை வேந்தர் பொறுப்புக் குழு சின்டி கேட் உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டது. இந்நிலையில் துணை வேந்தர் பொறுப்பு குழு உறுப்பி னர் லைவ்லீனா லிட்டில் பிளவர் விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை, கோப்புகளை சரியாக கையாளவில்லை என புகார்கள் எழுந்தது. இந்நிலையில், கடந்த ஜன.31 ஆம் தேதியன்று நடைபெற்ற பல்கலைகழக சின்டிகேட் கூட்டத் தில், துணை வேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பதவி யில் இருந்து முனைவர் லைவ்லீனா லிட்டில் பிளவரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. இதில், 19 உறுப்பி னர்களில் 17 உறுப்பினர்கள் அவரை பொறுப்பில் இருந்து நீக்க ஒப்புதல் வழங்கினர். இதனால், முனைவர் லைவ்லீனா கடந்த 31 ஆம் தேதியன்று முதல் துணை வேந்தர் பொறுப்புக் குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக பல்கலைகழக பதிவாளர் ரூபா குணசீலன் அறிவித்துள்ளார்.