சேலம், ஜூலை 12- சேலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு துவங்கியுள்ள நிலையில், சேலம் வடக்கு மாநகரம், சாமிநாதபுரம் பகுதி யில் வியாழனன்று மாலை கொடி யேற்று விழா நடைபெற்றது. பாலர் சங்க அமைப்பின் மாநில நிர்வாகி கே.ஜோதி லட்சுமி தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டப் பொருளாளர் சேக் அப் துல்லா கொடியேற்றி வைத்து சிறப்பு ரையாற்றினார், இதில் கே.கல்யாணசுந் தரம், என்.பிரவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், எம்.ஜீவா நன்றி கூறினார். நாமக்கல் தமுஎகச பொன்விழா ஆண்டு துவங் கியதை முன்னிட்டு, நாமக்கல் மாவட் டம் எலச்சி பாளையத்தில் புத்தகம் வாசித்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற் றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில், பொது மக்கள் மற்றும் மாணவ மாணவியர் மத்தியில் பல்வேறு தலைப்பிலான புத் தகங்கள் வழங்கப்பட்டு, புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. தொடர்ந்து மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இது போன்ற நிகழ்வு களை மேற்கொள்ள உள்ளதாக தமு எகச நிர்வாகிகள் தெரிவித்தனர்.