districts

img

தமுஎகச சார்பில் நூல்கள் வெளியீடு

சேலம், ஏப்.2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தில் நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங் கத்தின் சார்பில் சேலம் தமிழ் சங்கம், அண்ணா நூலகம் முதல் தளத்தில் நூல்கள் வெளியீட்டு விழா தமுஎகச மாவட்ட  செயலாளர் ஜி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் கவிஞர் சோபனா வரவேற்புரை யாற்றினார். எழுத்தாளர் இலா.வின்சென்ட், புன்னகை ரமேஷ் குமார், பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் ஓவியர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இதில் கவி ஞர் அ.ராதாகிருஷ்ணனின் “கற்களை உண்ணும் புறாக்கள்” கவிதை நூலை எழுத்தாளர் ந.செந்தில்குமார் வெளியிட்டார். முதல் பிரதியை கவிஞர் சக்தி அருளானந்தம் பெற்றுக் கொண்டார். இதேபோல் கவிஞர் புஷ்பவல்லி ராதாகிருஷ்ண னின் “ரத்தம் குடிக்கும் தீட்டு துணி” நாவலை குலவை இலக் கிய சிற்றிதழ் கவிஞர் மா.சத்தியமூர்த்தி வெளியிட தமு எகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பெற்றுக் கொண்டார். முடிவில், நூல் ஆசிரியர்கள் கவிஞர் அ.ராதாகிருஷ் ணன் மற்றும் புஷ்பவல்லி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற் புரையாற்றினர். தமுஎகச மாவட்ட பொருளாளர் ஐ.ஷேக்  அப்துல்லா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.