districts

img

தனியார்மயமாக்கும் முடிவை கைவிடுக

சேலம், பிப்.23- வங்கி வணிக தொடர்பு பணிகளை தனி யார் மயமாக்கும் முடிவை கண்டித்து அஸ் தம்பட்டி தமிழ்நாடு கிராம வங்கி தலைமை  அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம வங்கி  வணிக தொடர்பாளர் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம வங்கிகளில் பணியாற் றும் வணிக தொடர்பாளர் பணிகளை தனி யாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் வங்கி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்தும், கிராம வங்கி ஊழியர்கள் பணி  வழங்க வேண்டும். வணிக தொடர்பாளர் களுக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மற்ற வங்கி  ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகை களை போன்று, கிராம வங்கி வணிக தொடர் பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அஸ்தம்பட்டி தமிழ்நாடு கிராம வங்கி  தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற  இந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர் சங்க தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். இதில்.  சங்கத்தின் செயலாளர் ராமலட்சுமி, பொரு ளாளர் சங்கர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட  கிராம வங்கி வணிக தொடர்பாளர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தங்க ளின் கோரிக்கைகளை வங்கி சேர்மன் செல் வராஜிடம் முறையிட முயன்றபோது வங்கி  அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி னர். இதனால் ஆவேசமடைந்த வங்கி வணிக தொடர்பாளர்கள் 12 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம்  வரை மட்டுமே தங்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தங் களின் வாழ்வாதார தேவைகளுக்கான கோரிக்கைகளை வங்கி நிர்வாகம் நிறை வேற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆவேசமாக தெரிவித்த னர்.