districts

img

தமிழக மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது, ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்தரப்படுத்தவேண்டும்

தமிழக மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது, ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்தரப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பெருந்திரள் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் வீ.இளங்கோ, சிஐடியு சேலம் மாவட்ட தலைவர் டி. உதயகுமார்,  செயலாளர் ஏ .கோவிந்தன்,  துணைத் தலைவர்  ஆர். வெங்கடபதி , சேலம் மின் திட்ட கிளை தலைவர் பி. கருப்பண்ணன், செயலாளர் வி.ரகுபதி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.