திருப்பூர், ஜூலை 27- பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து பட்டியல் சாதி, பழங்கு டியினர், பெண்கள் இஸ்லாமியர்கள் மீது நடைபெற்று வரும் தக்குதல்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொட ரில் குரல் எழுப்பி தீர்வு காண வேண்டும் என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயனிடம் சனி யன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பட்டியல் சாதி, பழங்குடியினர், பெண் கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்ட காலத்தில் இருந்து தற்போதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியலின, சிறுபான் மையின மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடைபெறுகிறது. இவை யெல்லாம் தனித்தனி நிகழ்வுகள் அல்ல. மாறாக தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் கட்சியால் நிகழ்த்தப்பட்ட வெறுப்பு அர சியல். மக்களை பிரிக்கும் பிரச்சா ரத்தின் விளைவுகளே ஆகும். இத்த கைய கொடுமைகள் நிகழாத வண்ணம் தடுக்கவும், குற்றவாளிகளை தாமதம் இன்றி தண்டிப்பதற்கான சட்ட நடவ டிக்கைகளை விரைவு படுத்த நாடாளு மன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். மேலும், கல்வியிலும் வேலை வாய் புகளிலும் நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீட்டு முறையில் அரங்கேறும் அத்து மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படை மற் றும் அவுட் சோர்சிங் உள்ளிட்ட எல்லா வகையான வேலை முறைகளிலும் இட ஒதுக்கீடு அமலாக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டுள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களின் கல்வி உதவித் தொகை களை மீண்டும் வழங்கிட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பை, விரி வான சாதிவாரி கணக்கெடுப்போடு இணைந்து விரைவாக நடத்திட வேண் டும். தொடர்ந்து சிதைக்கப்பட்டு வரும் பட்டியல் சாதி பழங்குடி துணைத் திட்டங்களை முறையாக கண்காணிக்க வும் அமலாக்குவதற்குமான தேசிய அளவிலான சட்டத்தை நிறைவேற்ற வும், சமூக நீதியை பலப்படுத்தவும் உதவ வேண்டும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மனுவினை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் ஆகியோர், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனிடம் அளித் தனர்.