திருப்பூர், பிப்.21- திருப்பூர் மாவட்டத்தில் நகர் புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் மையத்தில் 668 சிசிடிவி கேமிராக்கள் பொருத் தப்பட்டு அனைத்து பணிகளும் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த சனியன்று (பிப்.19) நடைபெற்ற நிலையில், செவ்வாயன்று 12 வாக்கு எண் ணும் மையங்களில் வாக்கு எண் ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் மாநகராட்சியில் 60 மேசைகளி லும், 6 நகராட்சிகளில் 43 மேசை களிலும், 15 பேரூராட்சிகளில் 20 மேசைகளிலும் வாக்கு எண் ணிக்கை நடைபெற உள்ளது.
இவ்வாக்கு எண்ணிக்கையில் 246 வாக்கு எண்ணும் அலுவலர்கள், 41 நுண்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், இத்தேர்தல் பணியில் 1830 மின் னனு வாக்கு பதிவு இயந்திரங்கள், 1450 காவல்துறை அலுவலர்கள் கொண்ட மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 50 கண்காணிப்பு அலுவலர்களும் வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றிட நிய மனம் செய்யப்பட்டுள்ளனர். மேற் காணும் நடவடிக்கைகள் அனைத் தும் 668 சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், இவ்வாக்கு எண்ணும் மையங்களில் செவ்வாயன்று காலை 8.00 மணியளவில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப் பட்ட முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படவுள்ளது.
அதன்பின், மின்னணு வாக்கு இயந்திரங்க ளில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக் குகள் அந்தந்த மேசைகளில் எண் ணப்படும். பின்னர் ஒவ்வொரு சுற் றுக்குமான வாக்குகளின் முடிவு தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும். முன்னதாக, மேற்காணும் வாக்கு எண்ணிக்கை மையங்க ளுக்கு செல்லும் அலுவலர்கள் மற் றும் முகவர்கள் அலைபேசி உள் ளிட்ட அனைத்து மின்னணு கருவி களையும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தேர்தல் நடத்தும் அலுவலரால் அமைக்கப் பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பு அறையில் ஒப்படைத்து செல்ல உரிய பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் அனைவரும் உரிய கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கும் பொருட்டு வெப்பமானி, சானிடை சர் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து தமிழ் நாடு தேர்தல் ஆணையத்திற்கு விபரங்கள் சமர்ப்பிக்கும் பொருட்டு கட்டுப்பாட்டு அறை அந் தந்த வாக்கு எண்ணும் மையங்க ளில் அமைக்கப்பட்டு மாநில தேர் தல் ஆணைய வலைதளத்தில் பதிவு மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார்.