districts

img

கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாம்

உதகை, ஜூன் 3- கொடைக்கானலில் நடைபெறவுள்ள, கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகா மில் கலந்து கொள்ள நீலகிரியிலிருந்து செல்லும் மாணவர்களை கல்வி அலுவ லர்கள் வழி அனுப்பி வைத்தனர்.  பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும் கோடை விடு முறையைப் பயனுள்ள வகையில் செலவழிக் கவும், கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தலங்களில் நடை பெற்றுகிறது. இது, பள்ளி பாடங்களைத் தவிர்த்து சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூகநீதி, பெண்ணுரிமை மற்றும் எதிர்காலவியல் போன்றவற்றை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப் படுகிறது. இப்பயிற்சியில் அரசு பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் கல்வி, இலக்கியம், அறிவியல், வினாடி  வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய மாண வர்கள் முகாமில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு சிறப்பு முகாம் ஏற்காடு, கொல்லிமலை, கொடைரோடு - பழநி, குற்றா லம் என 4 இடங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து செல்லும் மாணவர்கள் கொடைக் கானலுக்கு அனுப்பபட உள்ளனர். இவர் களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் ஆசிரியர் பிரகாஷ் தலைமையி லான குழுவினர் ஞாயிறன்று உதகை பேருந்து நிலையத்தில் இருந்து வழி அனுப்பி  வைத்தனர். அவர்களுடன் ஆசிரியர்களும் உடன் செல்கின்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோடை கொண்டாட்டம் சிறப்பு  பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு உடற் பயிற்சி, செய்தித்தாள் வாசித்தல், உடல் மொழி சார்ந்த பயிற்சி அளித்தல், மேடைப் பேச்சு, தமிழ் திறன்களை வளர்க்கும் வகை யில் கருத்துப்பரிமாற்றம் சார்ந்த பயிற்சிகள், வானியல் அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளில் கலைத் திறன், தனித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 900 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து 8  பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்க ளுக்கு 7 ஆம் தேதி வரை 5 நாட்கள் பயிற்சி  அளிக்கப்பட உள்ளது. அவர்கள் தங்களு டைய அனுபவங்களை மற்ற மாணவர்க ளுக்கு இங்கு வந்து தெரிவிப்பார்கள் என்ற னர்.

;