districts

img

பொங்கல் தொகுப்பில் கரும்பு: நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை

பள்ளிபாளையம், டிச.29- பொங்கல் தொகுப்பில் கரும்பை இணைத்த தமிழக அரசிற்கு நன்றி தெரி வித்துள்ள விவசாயிகள், கரும்பை கூட் டுறவு சங்க அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைக ளுக்கு விநியோகம் செய்தால், விவசா யிகளுக்கு பெரும் பயனளிக்கும் என தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அடுத்துள்ள சமய சங்கிலி பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக கரும்பு வளர்ந்து வந்த நிலையில், தைப்பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. முதல் கட்டமாக அருகில் உள்ள கோபிசெட்டிபாளை யம், பெருந்துறை, அரச்சலூர், சங்ககிரி, உள்ளிட்ட  பகுதிகளை சேர்ந்த வியாபாரி கள் கரும்புகளை வாங்க, சமயசங்கிலி பகுதிக்கு வருகின்றனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், தற்போது அறுவடை காலகட்டம் நெருங்கிவிட்டது. தைப்பொங்கல் பண் டிகைக்கு இன்னும் சில தினங்களே  உள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக கடைகளை அமைத்து தைப் பொங்கல் கரும்புகளை வாங்கி  விற் பனை செய்யும் வியாபாரிகள் வழக்கம் போல இந்த ஆண்டும்  வந்து கொண்டி ருக்கின்றனர். ஜனவரி மாத துவக்கத் தில் அதிகளவு வியாபாரிகள் வருவார் கள் என எதிர்பார்ப்பாடுகிறது. தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப் பில் கரும்பை இணைத்ததற்கு தமிழக முதல்வருக்கு விவசாயிகள் நன்றி தெரி வித்தனர். கரும்பை கூட்டுறவு சங்க அதி காரிகள் நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளுக்கு விநியோ கம் செய்தால்  விவசாயிகளுக்கு உதவி யாக இருக்குமென தெரிவித்தனர்.