districts

img

தருமபுரியில் கரும்பு அரவைப் பணி தொடக்கம்

 தருமபுரி, நவ. 18- தருமபுரி கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு  அரவைப் பணியை மாவட்ட  ஆட்சியர்  கி.சாந்தி, தொடக்கிவைத் தார். இதுகுறித்து ஆட்சியர் கி.சாந்தி, கூறுகையில், சுப்ரமணிய சிவா  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான அரவைக்கு சுமார் 10,000 ஏக்க ரில் கரும்பு பதிவு செய்யப்பட்டு சுமார் 3,25,000 மெட்ரிக் டன்கள்  கரும்பு அரவை  செய்ய திட்டமி டப்பட்டுள்ளது. கரும்பினைக் கொண்டு வந்து சேர்க்கும்  பணியில் சுமார் 200 வண்டிகள் ஈடுபடுத் தப்பட்டுள்ளது.  கடந்த அரவைப்பருவத்தில் 10.91  சதம் சர்க்கரை கட்டுமானம் எய்தியதன் அடிப்படையில் நடப்பாண்டில் அரவை  செய்யப்படும் கரும்பிற்கு டன் ஒன் றுக்கு ரூ.3349.55 வீதம் வழங்கப்படும். இது தமிழகத்திலேயே டன் ஒன் றிற்கான கரும்பின் அதிகபட்ச விலை யாகும். நடப்பு அரவைக்கு சுமார்  30,000 டன்கள் இயந்திர அறுவடை  செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்றார்.  இந்நிகழ்வில், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஆர்.பிரியா, மாவட்ட வருவாய் அலு வலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழ னியப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், விவசாய பெருமக்கள், தொழிலாளர்கள், சர்க் கரை ஆலை நிர்வாக அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.