districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

திடீர் விநாயகர் கோவில்  தொழிலாளர்கள் எதிர்ப்பு

சேலம், செப். 6- சேலம் அரசு விரைவு போக்குவரத்து பணிமனைக்கு சொந் தமான இடத்தில் விநாயகர் கோயில் கட்டப்படுவதற்கு, சக  போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ள னர். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு  விரைவு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான இடத் தில் ஆரம்ப காலகட்டத்தில் நுழைவாயில் முன்பு சிறு அளவி லான விநாயகர் சிலை இருந்தது. இந்நிலையில் போக்குவ ரத்து பணிமனை இடத்தில் இருந்த விநாயகர் சிலை அப்புறப்ப டுத்தப்பட்டு தற்போது சந்திர வலம்புரி விநாயகர் கோவிலாக  சில ஊழியர்கள் கட்டியுள்ளனர். இந்நிலையில், பனிமனை யில் அனைத்து சமய மக்களும் உள்ள நிலையில், ஒரு மதம்  சார்ந்த கோவிலை கட்டுவது மத நல்லிணக்கத்திற்கு கேடு  விளைவிக்கும். தொழிலாளர்களின் ஒற்றுமை குலையும் என  சக போக்குவரத்து தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள் ளனர். மேலும், போக்குவரத்து பணிமனை முன்பு வைக்கப்பட் டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனருக்கும் எதிர்ப்பு தெரிவித்த னர்.

நடமாடும் சிகிச்சை வாகனம்: அமைச்சர் துவக்கி வைப்பு

ஈரோடு, செப்.6- நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை  வாகனம் மற்றும் அலுவலர்கள் பயன்பாட் டிற்கு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் 21 வாகனங்க ளின் சேவையினை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகவ ளாகத்தில் வெள்ளியன்று கால்நடை  பராமரிப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நட மாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாக னம் மற்றும் அலுவலர்கள் பயன்பாட்டிற்கு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் 21 வாகனங்களின் சேவையினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால்  சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ரெ.சதீஸ், மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், கால்நடை பராமரிப் புத்துறை மண்டல இயக்குநர் பழனிவேல் உட் பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை

கோபி, செப். 6- கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத் தில் லஞ்ச ஒழிப்புதுறையினர்  சோதனையில் லஞ்ச பணம் ரூ.1  லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்து  மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும்  லஞ்ச பணம் வசூலித்து கொடுத்த  இருவரிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி வட்டார  போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து (பொறுப்பு) அலுவலராக பெருந்துறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சக்தி வேல், மோட்டார் வாகன ஆய்வாள ராக ரவிக்குமார் இருந்து வந்துள்ள னர். கோபி மோட்டார் வாகன ஆய்வா ளர் ரவிக்குமார் விடுப்பில் சென்ற தால் கடந்த சில தினங்களுக்கு முன்  பவானி மோட்டார் வாகன ஆய்வா ளர் குணசேகரன் (பொறுப்பு) நிய மித்து பணியில் ஈடுபட்டு வந்துள் ளார். இந்நிலையில், கோபி வட்டார  போக்குவரத்து அலுவலகத்தில் புதிய ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு,  பதிவெண், வாகன தரசான்று, சாலை  வரி புதுப்பிதல், உள்ளிட்டவைக ளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்க ணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு) காவல் துறையினருக்கு புகார் தெரிவித்துள் ளனர். புகாரின் பேரில் கோபி வட்டார  போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர்  காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ்  தலைமையில் ஆய்வாளர் ரேகா உட்பட 7 பேர் கொண்டக் குழு திடீர்  சோதனை மேற்கொண்டனர். அப் போது வட்டார போக்குவரத்து அலு வலகத்தில் இருந்த 10க்கும் மேற் பட்ட இடைதரகர்கள், அலுவலர்களி டம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஒவ்வொரு இடைத ரகர்கள் துண்டு சீட்டுகளில் பெயர்க ளுடன் எழுதி லஞ்சம் கொடுத்ததில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை  கைபற்றி விசாரணை மேற்கொண்ட னர்.  அதில், மோட்டார் வாகன ஆய் வாளர் குணசேகரன் லஞ்சம் பணம்  வசூலிக்க தனியாக செந்தில் என்ப வரை நியமித்து இடைதரகர்களிடம் லஞ்ச பணம் பெற்று மோட்டார் வாகன ஆய்வாளருக்கு கொடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்து. வெள்ளியன்று வழக்கம்போல் அலு வலகத்தில் இருந்த 7 இடைதர கர்கள் துண்டு சீட்டுகளில் எழுதி  பணத்தை லஞ்சமாக  கொடுத்தி ருந்ததும் தெரிய வந்தது. பணத்தை  கைபற்றிய லஞ்ச ஒழிப்புதுறையி னர் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் மற்றும் லஞ்ச பணம் வசூலித்து கொடுத்த செந்தில் ஆகி யோரிடம் தொடர்ந்து விசாரணை யில் ஈடுபட்டனர்.

பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார் விசாரணை

அவிநாசி,செப்.6- அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியலுக்கு புறம் பாக பேசியும், மாற்றுதிறனாளி ஆசிரியரை  மாரியாதை குறைவாக பேசிய மகாவிஷ்ணு வின், அவிநாசியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில்  வெள்ளியன்று போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். சென்னை அசோக் நகரில் உள்ள அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  இரண்டு  தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும், மறுபி றவி குறித்தும் சர்ச்சையான கருத்தை  பரம் பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகா விஷ்ணு என்பவர் பேசினார். இதுகுறித்து அப் பள்ளியின் தமிழ் ஆசிரியர், பார்வை மாற்றுத் திறனாளி சங்கர் கேட்டதற்கு, அவரை மிரட் டும் தொனியில் வாக்குவாதத்தில் மகா விஷ்ணு ஈடுபட்டார். இது தொடர்பான வீடி யோக்கள் சமூக வலைதளங்களில் வைர லான நிலையில், பல்வேறு தரப்பினரும் மகா விஷ்ணுவின் மிது நடவடிக்கைக்கு எடுக்க  கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த குளத்து பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத் தில் அவிநாசி போலீசார் மற்றும் உளவுத் துறை போலீசார் விசாரணை மேற்கொண் டனர். இந்த விசாரணையில் பரம்பொருள் அறக் கட்டளைக்கு சிங்கப்பூர் மலேசியா இலங்கை  மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட  நாடுகளில் கிளைகள் இருப்பதும் தமிழ கத்தில் அவிநாசி குளத்துப்பாளையம் பகுதி யில் தலைமை அலுவலகம் இருப்பதும் தெரி யவந்தது. மேலும் மகாவிஷ்ணு தற்பொ ழுது சிட்னியில் பயிற்சி வகுப்பு எடுக்க சென் றுள்ளதாகவும், இரண்டு மூன்று தினங்களில்  அவர் திரும்பி வருவார் எனவும் தெரியவந் துள்ளது. மேலும் மகாவிஷ்ணுவின் பிறப் பிடம் அவரது பின்புலம் வருமான வாய்ப்பு கள் மற்றும் அறக்கட்டளைக் காண நன்கொடை  விவரங்கள் மற்றும் என்னென்ன மாதிரியான  பணிகளில் அறக்கட்டளை ஈடுபடுகிறது எந் தெந்த பள்ளிகளில் மகாவிஷ்ணு சொற்பொ ழிவு ஆற்றியுள்ளார் என்னென்ன தலைப்புக ளில் அவர் சொற்பொழிவு செய்து வருகிறார்  என பல்வேறு கோணங்களில் முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுதானியம் நம் முன்னோர்களின் உணவு மந்திரம் சிறுதானிய விழாவில் மாவட்ட ஆட்சியர் பேச்சு

ஈரோடு, செப்.6- சிறுதானியம் நம் முன்னோர்களின் உணவு மந்திரம். அது சிறிய விலையில் பெரிய  பலன்களை தருகின்றது. என சமூகநலன் மற் றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு  சிறுதானிய விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசி னார். ஈரோடு மாவட்டம், திண்டல் வேளாளர்  மகளிர் கல்லூரியில் வெள்ளியன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு சிறுதானிய விழாவினை மாவட்ட  ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குத்துவி ளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசு கையில், ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி வட் டத்தில் மல்லியம்மன்துர்கம் என்ற மலை கிராமத்திற்கு ஆய்விற்கு சென்ற பொழுது  அங்கிருந்த மலைவாழ் மக்கள் சிறுதானி யத்தால் சமைக்கப்பட்ட உணவினை வழங்கி னார்கள். நகரப் பகுதிகளில் பல்வேறு வளர்ச் சிகள் இருந்தாலும் சிறுதானிய உணவினை  உண்ணும்பொழுது மிகவும் ஆரோக்கிய மாக வாழலாம். சிறுதானியம் நம் முன்னோர்க ளின் உணவு மந்திரம். அது சிறிய விலையில்  பெரிய பலன்களை தருகின்றது. சிறுதானிய  உணவு பல நோய்களுக்கு தீர்வாக உள்ளது.  எனவே நாம் சிறுதானியத்தின் முக்கியத்து வத்தினை உணர்ந்து சிறுதானிய உண விற்கு மாற வேண்டும் என்றார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிறுதானி யங்களால் சமைக்கப்பட்ட உணவு பொருட் கள் கண்காட்சினை பார்வையிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த சிறுதானியத்தால் செய் யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களை சுவைத்துப் பார்த்தார். முன்னதாக திண்டல்  அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுதானி யங்கள் முக்கியத்துவம் குறித்த விழிப்பு ணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி  வைத்தார்.  இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ்,  உட்பட மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தற்காலிக சிலைகளை கரைக்க மட்டுமே அனுமதி

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தற்காலிக சிலைகளை கரைக்க மட்டுமே அனுமதி திருப்பூர், செப்.6- விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு திருப்பூர்  மாவட்டத்தில் நிறுவப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தற் காலிகமாக விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்க ளில் மட்டும் கரைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவினை  முன்னிட்டு தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழி பாடு செய்யும் நேர்வுகளில், சிலைகள் நிறுவுவதற்கு கடை பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், பொது மக்கள் மற்றும் அமைப்புகளால் நிறுவப்படும் சுற்றுச்சூழலை  மாசுபடுத்தாத சிலைகள் மட்டுமே கரைக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரி வித்துள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அமைப்புகளால் நிறுவப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் பி.ஏ.பி வாய்க்கால், பொங்கலூர் பி.ஏ.பி  பிரதான வாய்க் கால், எஸ்.வி புரம் வாய்க்கால், எஸ்.வி.புரம் பி.ஏ.பி வாய்க் கால், கணியூர், அமராவதி ஆறு, கெடிமேடு  பி.ஏ.பி வாய்க் கால் ஆகிய அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைக்க தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அனுமதி வழங் கியுள்ளது. மேலும் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல பொதுமக்கள் மற்றும் அமைப்புகளுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

பழுதுபார்ப்பு பயிற்சி வகுப்புகள்:

பழுதுபார்ப்பு பயிற்சி வகுப்புகள்: திருப்பூர், செப்.6- ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் பழுதுபார்ப்பு மற்றும்  சர்வீஸ் செய்தல் 30 நாள் பயிற்சி வகுப்புகளில் சேர, எழுத படிக்கத் தெரிந்த 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட, ஆண்,  பெண்  இருவரும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ் குமார் கூறி யிருப்பதாவது, திருப்பூர் அனுப்பர்பாளையத்திலுள்ள கனரா  வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலை யத்தில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் பழுதுபார்ப்பு  மற்றும் சர்வீஸ் செய்தல் உள்ளிட்டவற்றை 30 நாள் முழு நேரப் பயிற்சிகளை கற்றுக்கொள்ள பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சி வருகின்ற செப்.9 திங்களன்று  துவங்க உள்ளது. இப்பயிச்சியில் சேர எழுத படிக்கத் தெரிந்த  18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட, ஆண், பெண்  இருவரும்  விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. காலை-மாலை தேநீர் மற்றும்  மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடி வில் ஒன்றிய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்ப டும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கனரா வங்கி கிராமப்புற  சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர்என்ற முகவரிக்கு நேரில் வரவும். இணையம்  மூலம் முன்பதிவு செய்ய https://tinyurl.com/4z2274t6 என்ற  லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம். முதலில் வருவோர்க்கு  முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி: 9489043923,7449206375,8610533436 என்ற  எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

திருக்குறள் ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவர்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், செப்.6-  உலகப் பொதுமறையாம் திருக்குறளில் 1330 குறட்பாட்க ளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற  பள்ளி மாணவர்களுக்குத் பரிசுத்தொகை பாராட்டுச் சான்றி தழ் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக் களை மாணவர்கள் இளம்வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங் கும் வகையில் 1330 குறட்பாட்களையும் மனப்பாடம் செய்து  ஒப்புவிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவர்களுக்குத் தலா  ரூபாய் பதினைந்தாயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றி தழ் ஆகியவை தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோ றும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2024-2025  ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவியர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த முற்றோத லில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பு விக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குற ளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்பு  பெயர்கள், உரை எழுதியோர் போன்றவை தெரிந்து இருந் தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். முற்றோதலில் பங் கேற்கும் மாணவர்கள், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக்குழுவின் முன்னிலையில், நேராய்வுக்கு உட்ப டுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ்  வளர்ச்சி இயக்குநருக்கு திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்  துறை துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்படும். இதில், ஏற் கனவே பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க இய லாது. இந்த திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங் கள் திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்  அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்  துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்  அலுவலகம், அறை எண்.608, 6 ஆம் தளம், மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரிக்கோ அல்லது  அஞ்சல் வழியாகவோ அனுப்பிவைக்கலாம் என ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வீட்டில் திருட்டு

திருப்பூர், செப்.6- அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி வீட்டின் பூட்டை உடைத்து 4.5 பவுன் நகை களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம் பாளையத்தில் வசிப்பவர் செங்கோடன் மகன் சுப்பிரம ணியம் (65). தஞ்சாவூர் பகுதியில் கூடுதல் காவல் துணைக்  கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்,  பவானியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2 நாள்களுக்கு  முன்பு சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட் டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டி னுள்ளே பீரோவில் வைத்திருந்த நான்கரை பவுன் நகைகள்  திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பே ரில், அவிநாசி போலீஸார் தனிப் படை அமைத்து நகைக ளைத் திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார் விசாரணை

அவிநாசி,செப்.6- அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியலுக்கு புறம் பாக பேசியும், மாற்றுதிறனாளி ஆசிரியரை  மாரியாதை குறைவாக பேசிய மகாவிஷ்ணு வின், அவிநாசியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில்  வெள்ளியன்று போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். சென்னை அசோக் நகரில் உள்ள அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  இரண்டு  தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும், மறுபி றவி குறித்தும் சர்ச்சையான கருத்தை  பரம் பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகா விஷ்ணு என்பவர் பேசினார். இதுகுறித்து அப் பள்ளியின் தமிழ் ஆசிரியர், பார்வை மாற்றுத் திறனாளி சங்கர் கேட்டதற்கு, அவரை மிரட் டும் தொனியில் வாக்குவாதத்தில் மகா விஷ்ணு ஈடுபட்டார். இது தொடர்பான வீடி யோக்கள் சமூக வலைதளங்களில் வைர லான நிலையில், பல்வேறு தரப்பினரும் மகா விஷ்ணுவின் மிது நடவடிக்கைக்கு எடுக்க  கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த குளத்து பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத் தில் அவிநாசி போலீசார் மற்றும் உளவுத் துறை போலீசார் விசாரணை மேற்கொண் டனர். இந்த விசாரணையில் பரம்பொருள் அறக் கட்டளைக்கு சிங்கப்பூர் மலேசியா இலங்கை  மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட  நாடுகளில் கிளைகள் இருப்பதும் தமிழ கத்தில் அவிநாசி குளத்துப்பாளையம் பகுதி யில் தலைமை அலுவலகம் இருப்பதும் தெரி யவந்தது. மேலும் மகாவிஷ்ணு தற்பொ ழுது சிட்னியில் பயிற்சி வகுப்பு எடுக்க சென் றுள்ளதாகவும், இரண்டு மூன்று தினங்களில்  அவர் திரும்பி வருவார் எனவும் தெரியவந் துள்ளது. மேலும் மகாவிஷ்ணுவின் பிறப் பிடம் அவரது பின்புலம் வருமான வாய்ப்பு கள் மற்றும் அறக்கட்டளைக் காண நன் கொடை விவரங்கள் மற்றும் என்னென்ன  மாதிரியான பணிகளில் அறக்கட்டளை ஈடுப டுகிறது எந்தெந்த பள்ளிகளில் மகாவிஷ்ணு  சொற்பொழிவு ஆற்றியுள்ளார் என்னென்ன  தலைப்புகளில் அவர் சொற்பொழிவு செய்து  வருகிறார் என பல்வேறு கோணங்களில் முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகி றது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு உதகை, செப்.6- உதகை அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோம்ரா ஓரான் (20).  இவர் நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த மஞ்சூர் பகுதி யில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கடந்த ஆண்டு பணி யாற்றி வந்தார். இதேபோல் இவருடன் எஸ்டேட்டில் பணி யாற்றும் வட மாநிலத்தை சேர்ந்த பலரும் எஸ்டேட் நிர்வா கத்திற்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள குடியிருப்பு களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 12.11.2023 ஆம் தேதியன்று எஸ்டேட்  குடியிருப்பு பகுதியில் தங்கி உள்ள வட மாநில கூலி தொழி லாளி தம்பதியின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து  தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அதிர்ச்சி யடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை உதகை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இது குறித்து உதகை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர். இதன்பேரில் அப்போதையை காவல் ஆய்வா ளர் மீனாபிரியா, உதவி ஆய்வாளர் லட்சுமி  ஆகியோர் தலை மையிலான போலீசார் சோம்ரா ஓரானை பிடித்து விசா ரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கூடலூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி உதகை  கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட சோம்ரா  ஓரானுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம்  அபராதமும் விதித்து நீதிபதி லிங்கம் தீர்ப்பளித்தார். மேலும்,  பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில்  ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில்  அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடி னார். இதன் பின்னர் சோம்ரா ஓரான் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதேபோல் இந்த  வழக்கில் குற்றவாளியும் வட மாநிலத்தை சேர்ந்தவர். மேலும்,  சாட்சியாக சேர்க்கப்பட்டவர்களும் வடமாநிலத்தை சேர்ந்த வர்கள் என்பதால் அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. இரு  தரப்பிலும் கருத்து பரிமாற்றம் பெரும் சவாலாக இருந்தது.  இந்தப் பிரச்சினைக்கு மத்தியிலும் 10 மாதத்தில் காவல்  துறையினர் வழக்கை முடித்து சிறப்பாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லவ் ஜிகாத் என அவதூறு பரப்பிய பாஜக மாநில நிர்வாகி கைது

உதகை, செப்.6- காபியில் சயனைடு கொடுத்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை, லவ் ஜிகாத் என சமூக  வலைதளத்தில் அவதூறு பரப்பிய பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப் பட்டார். நீலகிரி மாவட்டம், உதகை அருகே  உள்ள பென்னட் மார்க்கெட் பகுதியை  சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ஜவஹருல்லா  (50). இவருடைய மனைவி யாஸ் மின்(47). இவர்களுக்கு இம்ரான் (27),  முக்தார் (24) என இரண்டு மகன்கள் உள்ளனர். இம்ரான், உதகை வண்டிச் சோலை பகுதியை சேர்ந்த அப்துல் சமது, நிலாபர் நிஷா தம்பதியின் மக ளான ஆஷிகா பர்வீன் (22) ஆகி யோருக்கு 2021 ஆம் ஆண்டு  திரும ணம் நடைபெற்றது. இந்நிலையில், மாமியாரான யாஸ்பினுக்கும், மரு மகளான ஆஷிகா பர்வீனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் 23  ஆம் தேதியன்று ஆஷிகா பர்வீனுக்கு  காபியில் சயனைடு கலந்து கொடுக் கப்பட்டு கொலை செய்யப்பட்டார். வர தட்சனையாக ரூ. 20 லட்சம் கேட்டு தரா ததால் இந்தக் கொடூர செயலில் இளம் பெண்ணின் மாமியார் ஈடுபட்டது தெரி யவந்தது. இதைத்தொடர்ந்து யாஸ் மின், இம்ரான், முக்தார் மற்றும் காலிப்  ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில், ஆஷிகா பர்வீன் ஒரு  இந்து பெண் என்றும் அவரை லவ்ஜி காத் மூலம் இஸ்லாமியராக மாற்றி இம் ரான் திருமணம் செய்து கொண்டு வர தட்சணை கொடுமை செய்து கொன்ற தாக சமூக வலைதளங்களில் தவறான  தகவல் பரவியது.  சமூக வலை தளங்களில் பரவும்  இந்த தகவலை மறுத்த காவல் துறையி னர் உடனடியாக ஆஷிகா பர்வீன் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டனர். மேலும், சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பியது யார்?  என சைபர் கிரைம் காவல் துறை உதவியு டன் தேடி வந்தனர். அப்போது, விருதுந கர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப் பினர் வெற்றிவேல் தான் இந்த தவ றான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை கண்டறிந்தனர். இதை யடுத்து அவர் மீது வியாழனன்று உதகை மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், அருப் புக்கோட்டைக்குச் சென்று வெற்றி வேலை கைது செய்து உதகைக்கு அழைத்து வந்தனர். லவ் ஜிகாத் என  அவதூறு பரப்பிய சம்பவத்தில் பாஜக  நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம்  நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடை ஏலத்தை வெளிப்படை தன்மையுடன் நடத்த கோரிக்கை
 

கடை ஏலத்தை வெளிப்படை தன்மையுடன் நடத்த கோரிக்கை நாமக்கல், செப்.6- நாமக்கல் புதிய பேருந்து நிலைய கடைகளின் பொது ஏலத்தினை வெளிப் படையாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. நாமக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள மகேஸ் வரியை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர்  ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் நகராட்சி கடை உரிமையாளர்கள் சங்க  தலைவர் மாணிக்கம், மாவட்ட செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசி யேசன் தலைவர் ராயல் பத்மநாபன் உள்ளிட்டோர், வியாழனன்று சந்தித்து,  பணிகள் சிறக்க வாழ்த்து கூறினர். அப்போது, வணிக உரிமத்தினை 3 ஆண்டுக ளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் மற்றும் நகராட்சி கடைகளின் ஒப்பந்த காலத் தினை 12 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் அறி வித்தது, நகர நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், புதிய பேருந்து நிலைய  கடைகளின் பொது ஏலத்தினை மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படை தன்மை யுடன் நடத்த வேண்டும், என வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அறிவுசார் மையம் மற்றும் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க முதற்கட்ட மாக ரூ.30 ஆயிரம் நன்கொடை வழங்குவதாகவும், நகர வளர்ச்சி மற்றும்  வணிகர் நலன் சார்ந்து மாநகராட்சி முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைக ளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்கும், என உறுதியளிக்கப்பட்டது.