உதகை, ஆக. 7- மேல் கூடலூரில் திடீரென நடை பாதைகளிலும், வீடுகளிலும் விரி சல் ஏற்பட்டதால், அதை கோட் டாட்சியர் தலைமையிலான புவியி யல் ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூரில் உள்ள மேல் கூடலூரில் திடீரென நடை பாதைகளிலும், வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந் தனர். இதனையடுத்து, பாதுகாப்பு நலன் கருதி அந்த பகுதியில் இருந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 48 பேர் மாற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின்பு தொடர் மழையின் காரணமாக வீடு களில் விரிசல் ஏற்பட்டதோடு ஒரு சில வீடுகள் இடிந்தன அதே நேரம் 7 அடி வரை வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால், உடனடி யாக அங்கிருந்த பொதுமக்கள் வாடகை வீடுகளுக்கும் முகாம்க ளுக்கும் சென்றனர். இதையடுத்து, அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், நிலச் சரிவு பகுதி என்பதால் பொதுமக் கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள் ளதாக பேனர்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில், புதனன்று கூட லூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையிலான புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கோக் கால் பகுதியில் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். வீடுகள் கட்டப்பட்டிருக்கும் பகுதிகளில் நீரோட்டம் உள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் புவியி யல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.