தருமபுரி, மார்ச் 6- நிலத்தை அபகரிக்கும் நபர்களுக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி வட்டம் இலக்கியம் பட்டி ஊராட்சிக்குட்பட்டது வி.ஜெட்டிஅள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த லெட்சுமி (எ) ராஜலட்சுமிக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான பட்டா இவர் பெயரில் உள்ளது. இவர் வெளியூர் சென்றுள்ள நிலையில், இப்பகுதி மக்கள் சுமார் 50 ஆண்டுகாலமாக அந்த நிலத்தில் ஆடுமாடு வளர்க்க கொட்டகை அமைத்தும் மரங்களை வளர்த்தும் வந்தனர். சிலர் அங்கேயே குடியிருந்தும் வருகின்றனர். இந்நிலையில் தரும புரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை லட்சுமி (எ) ராஜ லட்சுமிக்கு சொந்தமான நிலம் சர்வே எண் 578,579 ஆர்ஜிதம் செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அர்ஜிதம் செய்த இடத்தை தருமபுரியில் உள்ள ஒருவர் அந்த இடத்தை அளவிடுவதும், பிரிப்பதுமாக உள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறுகையில், பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை அர்ஜிதப்படுத்திய நிலத்தை தனி ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த நிலத்தை வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் நீண்ட ஆண்டுகாலமாக அனுபவித்து வருகின்றனர். எனவே தனிநபர் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் துணைபோகிறது. வி.ஜெட்டி அள்ளி பகுதி யில் அந்த நிலத்தை நீண்ட ஆண்டுகாலம் அனுபவித்து வருப வர்களுக்கும் அதே பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு மனைப் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தினர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் எம்.பழனி தலைமை ஏற்றார். இதில், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் என். கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.பூபதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.ரவி, எம்.மீணாட்சி, எஸ்.தமிழ்மணி, மாரியப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத் தின் முடிவில், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.