districts

img

அஞ்சல், பிஎஸ்என்எல் ஊழியர்கள் கே.சுப்பராயன் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளிப்பு

திருப்பூர், அக்.28 திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயனை ஊத்துக்குளி சாலை யில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில், திருப் பூர் அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கம் மற்றும் என்சிசி பிஏ சார்பில் சந்தித்து கோரிக்கைகள் அடங் கிய மனுக்களை அளித்தனர்.  ஓய்வூதியர் பிரச்சினைகள், மெடிக்கல் பிரச் சினைகள் குறித்த இரண்டு மனுக்கள் மற்றும்  பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் கூட்டுக் குழு சார் பில் இந்த மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை களை நாடாளுமன்ற உறுப்பினரிடம் விளக் கினர். இந்த மனுக்களை ஓரிரு நாட்களில் சம்பந் தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பி வைப்பதாக வும், நவம்பர் இறுதியில் பாராளுமன்றம் நடக் கும்போது நேரில் கொடுத்து விட்டுப் பேசுவ தாகவும் உறுதி அளித்துள்ளார். பொது வாக இந்த அரசு மக்கள் நலனுக்கும், தொழி லாளர் நலனுக்கும் எதிராகச் செயல்பட்டு வரு கிறது என்ற கருத்தை முன்வைத்தார். குறைக ளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பின ருக்கு நன்றி தெரிவித்தனர்.  போஸ்டல் மற்றும் ஆர்எம்எஸ் சங்கங்க ளின் சார்பில் சின்னசாமி, கருப்பசாமி, மாரி முத்து, ராஜேந்திரன், ராம்ராஜ் ஆகியோரும் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில்  சௌந்த ரபாண்டியன், சுப்பிரமணியன், முகம்மது ஜாபர், வின்சென்ட் பாக்கியம், கந்தசாமி, பழ னிவேல்சாமி ஆகியோரும் இந்தச் சந்திப் பில் கலந்து கொண்டனர்.