தமிழக சட்டமன்ற மனுக்கள் குழுவினர் உதகையில் ஆய்வு
உதகை, ஜூன் 19- தமிழக சட்டமன்ற மனுக்கள் குழுவினர் உதகையில் நேரடியாக ஆய்வு நடத்தி, 62 மனுதாரர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். உதகையில் ஆய்வு மேற்கொள்வதற்காக தலைவர் கோவி.செழியன் தலைமையில், குழு உறுப்பினர்கள் மு.பெ. கிரி, ஆ.கோவிந்தசாமி, எம்.வி.பிரபாகரராஜா, சா.மாங்குடி மற்றும் செயலாளர் கி.சீனிவாசன், துணை செயலாளர் கோ. கணேஷ் ஆகியோர் அடக்கிய தமிழக சட்டமன்ற மனுக்கள் குழுவினர் வெள்ளியன்று உதகையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் செய்தியளர்களிடம் கூறுகை யில், பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலிருந்து அதிகம் மழை பெய்தால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை பார்வை யிட்டு மழைநீர் தேங்காமல் செல்லும் வகையிலும், ஆங் காங்கே குட்டைகள் அமைத்து தண்ணீரை தேக்கும் வகை யிலும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். கள ஆய்வின் போது உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் கள், மின் இணைப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமப்படு வதாக தெரிவித்தனர். கேரட் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு கேரட் தரம் பிரிக்கும் எந்திரம் மற்றும் மானியம் வழங்கி னால், உற்பத்தியை மேம்படுத்த உதவியாக இருக்கும் என தெரிவித்தனர். தாவரவியல் பூங்கா ஊழியர்கள் பணி நிரந்தர கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் முதல் வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரி வித்தார். மேலும், இந்த ஆய்வு கூட்டத்திற்கு 52 மனுதாரர்கள் வர வழைக்கப்பட்டனர். முந்தைய காலத்தில் நிலுவையிலி ருந்த 10 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உடனடி யாக தீர்வு காண அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் அம் ரித், எம்எல்ஏ-கள் ஆர்.கணேஷ், பொன்.ஜெயசீலன், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உட னிருந்தனர்.
ஈரோடு நகரில் போக்குவரத்து மாற்றம்
ஈரோடு, ஜூன் 19- ரயில்வே நுழைவு பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெறு வதால், ஈரோடு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது. ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் உள்ள சேதம டைந்த ரயில்வே நுழைவு பாலம் சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. இதனால் கரூர், மூலனூர், வௌ்ள கோயில், தாராபுரம், காங்கயத்திலிருந்து வரும் பேருந்து கள் அண்ணமார் பெட்ரோல் பங்க், நாடார் மேடு வழியாக சாஸ்திரி நகர், பாலத்தைக் கடந்து சென்னிமலை சாலையை அடைந்து அங்கிருந்து நகருக்குள் வரலாம். பேருந்து நிலை யத்திலிருந்து செல்லும் பேருந்துகள் காளை மாட்டு சிலை வழியாக செல்லலாம். லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ரிங் ரோடு வழியாக திண்டல் சென்று அங்கிருந்து நகருக்குள் வரலாம் என காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு
மேட்டுப்பாளையம், ஜூன் 19- அரசு விதிமுறைகளின் பள்ளி வாகனங்கள் இயக்கப்படு கிறதா? என மேட்டுப்பாளையத்திலுள்ள 55 பள்ளிகளை சேர்ந்த 390 வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளை யம், அன்னூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், கூட லூர், பொகளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 55 பள்ளிகளைச் சேர்ந்த 390 வாகனங்களை ஆய்வு செய்யும் பணி சனி யன்று நடைபெற்றது. மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமை யிலான அதிகாரிகள் குழுவினர், வாகனங்களின் படிக்கட்டு அமைப்பு, வாகனத்தின் உள் பகுதியில் இருந்த நடைமேடை, அவசரகால வழி, முதலுதவி மருந்துப்பெட்டி, வேக கட்டுப் பாடு கருவி, சிசிடிவி கேமரா, தீயணைப்பு கருவி ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகன ஓட்டுநர்க ளின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு கண் குறைபாடு உள்ளதா? எனவும் பரிசோதிக்கப்பட்டது. பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கருதி வாகனங் களை போக்குவரத்து விதிகளுக்குட்பட்டு மிக கவனத்து டன் இயக்கும்படியும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்ப டது. முன்னதாக, இந்த ஆய்வின்போது மேட்டுப்பாளை யம் வட்டாட்சியர் மாலதி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவ குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைவு
உடுமலை, ஜூன் 19- உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை மேற்கு தொடர்ச்சி மலை யில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீராதார மாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இன்னும் தொடங்காத தால் குறைந்த அளவே நீர் வரத்து உள்ளது அணை யின் நீர்மட்டம் தற்போது 63 அடி என்ற அளவிலேயே உள்ளது ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் நீர் மட்டம் 77.30 அடியாக இருந் தது. கடந்த இரண்டு ஆண்டு களாக பருவமழை காலத் தில் அணை நிரம்பி வழிந் தது . எனவே தென்மேற்கு பருவமழை எப்போது துவங் கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
கார்-ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி
திருப்பூர், ஜூலை 19- பல்லடம் அருகே கார்-ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத் தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. கோவை காட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் மூர்த்தி (51), டேவிட்ராஜ் (33), சுரேஷ் (36), வெள்ளிமலை (33), ஆகிய 4 பேரும் ஜிப்பில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி என்ற இடம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே பல்லடத் தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் மீது, இவர்கள் சென்ற ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜீப்பில் வந்த 4 பேருக்கும், எதிரே வந்த காரில் பயணம் செய்த உடுமலையை சேர்ந்த திராவிடமணி (69), அவரது மனைவி மீனாட்சி (56), மகள் கிருத்திகா (29), ஆகி யோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தக வல் அறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மூர்த்தி (51), உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மற்றவர்களுகு முத லுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப் பூர் தனியார் மருத்துவமனையிலும், கோவை தனியார் மருத் துவமனையிலும் சேர்த்தனர்.
நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம்
திருப்பூர், ஜூன் 19- திருப்பூரில் தேசிய நலவாழ்வு குழு பணியாளர்களுக்கு 30 சதவிகிதம் ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும பணியாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள தனி யார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ராஜதுரை தலைமை தாங்கி பேசினார். இதில் பொதுச்செய லாளர் சுரேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தேசிய நலவாழ்வு குழும பணியாளர் களின் கோரிக்கையான 30 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது. இதில், மகப்பேறு விடுப்பினை நிறைவேற்றி கொடுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் தந்தை கைது
அவிநாசி, ஜூன் 19- 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந் தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சனி யன்று கைது செய்தனர். பெருமாநல்லூர் அருகே பெற்றோருடன் வசிக்கும் சிறுமி (12), வெள்ளியன்று பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தை ராமசாமி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த தாய், கொடுத்த புகாரின் பேரில் அவி நாசி அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவிநாசியில் இரண்டு இடங்களுக்கு இடைத்தேர்தல்
அவிநாசி, ஜூன் 19- அவிநாசி ஒன்றியத்தில், காலியாக உள்ள கிராமப்புற ஊராட்சி வார்டு உறுப்பி னர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கு ஜூலை 9 தேதி தேர்தல் நடத்தவுள்ளது. இதை யொட்டி ஜூலை 12 ஆம் தேதி வாக்கு எண் ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர் கள் யார் என அறிவிக்கப்படும் எனவும் தேர் தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவிநாசி ஒன்றியம் ராமநாதபுரம், உப்பி லிபாளையம் என்ற இரண்டு ஊராட்சிக ளுக்கு சுமார் 7000 வாக்காளர் அடிப்படை யில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் தேர்வு, என்ற நடைமுறையில் இருந்து வருகிறது. அதன் படி நடைபெற்று முடிந்த தேர்தலில் அப்பகு தியைச் சேர்ந்த லோகநாதன் (அதிமுக) என்ற நபர் ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய் யப்பட்டார். ஆனால், அவர் உடல் நலக்கு றைவு காரணமாக ஓரிரு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதன் காரணமாக ஒன் றிய கவுன்சிலர் பதவி காலியாக உள்ளது. அதேபோல, ஐயம்பாளையம் ஊராட்சி 6 ஆவது வார்டு உறுப்பினர் சுந்தரராஜ் கால மானதை தொடர்ந்து, அவ்விடத்திற்கும் தேர் தல் நடைபெறவுள்ளது.
மாற்று திறனாளிகள் மாவட்ட மாநாடு: கிராமங்கள் தோறும் அணி திரட்டல்
திருப்பூர், ஜூலை 19- கடத்தூர், கணியூர், சோழமாதேவி, நீலம்பூர், 9/6 செக்போஸ்ட், மானுப்பட்டி ஆகிய கிராமங்களில் ஜூலை 17 ,18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாற்று திறனா ளிகள் மாவட்ட மாநாடு குறித்து ஆலோ சனை செய்ய கிளைக் கூட்டங்கள் நடத்தப் பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான 4 ஆவது திருப்பூர் மாவட்ட மாநாடு உடுமலைப்பேட்டையில் வருகிற ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஜூலை 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாற் றுத்திறனாளிகள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இதற்கு கிளைகள் தோறும் கிளைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் ஞாயிறன்று காலை 10 மணிக்கு துவங்கி கடத்தூர் கணி யூர் சோழமாதேவி நீலம்பூர் 9/6 செக் போஸ்ட் மானுப்பட்டி ஆகிய கிராமங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாநாட்டு நிதியாக மாற்றுத்திறனாளி இடம் நிதி வசூல் செய் வது குறித்து பேசப்பட்டது. பேரணியில் ஆயிரக்கணக்கான மாற் றுத்திறனாளிகளை பங்கெடுக்க வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மாலினி மற்றும் குரு சாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் உட்பட தோழர்கள் பங்கெடுத்து மாற்றுத்திறனாளிடம் விளக்கி பேசப்பட்டது. கூட்டத்தில் 200க்கு மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் பங்கெடுத்தனர்.
இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயற்சி
பாஜகவை சேர்ந்த இருவர் கைது கோவை, ஜூன் 19- இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று திருமணம் செய்ய முயன்றதாக பாஜகவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், அன்னூரை அடுத் துள்ள மசக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த பெண் (27). இவரது உறவினர் அதேபகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (38). அந்த பெண்ணை ஒருதலையாக காத லித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சனியன்று அந்த பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த சண்முகசுந்தரம் தனது காரில் வழிமறித்து தனக்கு ஒரு முடிவு சொல்லுமாறு மிரட்டி உள்ளார். பின்னர் சண் முகசுந்தரம் இளம்பெண்ணை வலுக்கட்டா யமாக தனது காரில் ஏற்றிய பொன்னே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள கோவி லுக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து கட் டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பி அந்த பெண் அன் னூர் காவல் நிலையத்தில் புகாளித்தார். இப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இளம்பெண்ணை கட்டாய திரு மணம் செய்ய முயன்ற சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசா ரணையில் அவருக்கு உதவியாக கெம்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜய குமார் (43) என்பரும் இருந்தது தெரிய வந்தது. அவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி னர். விசாரணையில் விஜயகுமார் உதவிய தும், இவர்கள் 2 பேரும் பாஜகவை சேர்ந்த வர்கள் என்பதும் தெரியவந்தது. இதைய டுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு விடுதி ஏற்படுத்தி தரக்கோரி சிஐடியு கடிதம்
பொள்ளாச்சி, ஜூன் 19- வால்பாறை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நலன் கருதி கல்லூரி அருகிலேயே தங்கும் விடுதி அமைக்க வேண் டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் தமிழக முதல்வ ருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர் மற்றும் அலுவலர்கள் சங்கம் (சிஐடியு) மாவட்ட செயலாளர் பி.பரம சிவம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வால்பாறை அரசு கலைக்கல் லூரி கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக அரசால் துவங்கப்பட் டது. இக்கல்லூரியில் பி.காம், பிஏ, பிபிஏ, பிஎஸ்சி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், பொள்ளாச்சி, உடுமலை, கிணத்துக் கடவு, திருப்பூர், ஈரோடு, உதகை உள்ளிட்ட வெளி மாவட் டங்களிலிருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல் லூரிக்கு தங்கும் விடுதி பல கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், மாணவர்கள் மிகவும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். மேலும், தனியார் தங்கும் விடுதிகளில் அதிகளவு செலவு செய்து தங்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மாண வர்களின் நலன் கருதி தமிழக முதல்வர் மற்றும் தமிழக கல்வித்துறை அமைச்சகம் உடனடியாக வால்பாறை அரசுக் கலைக்கல்லூரிக்கு அரசு சார்பில் மாணவர்கள் தங்கும் விடுதி வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.