districts

img

அநீதிக்கெதிராக மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்

ஈரோடு, ஜுன் 27- அநீதிக்கு எதிராக, பாரதி  சொன்னதைப் போல மாணவர்கள்  ரௌத்திரம் பழக வேண்டும் என  குடும்ப மாணவர் சந்திப்பு நிகழ் வில் பங்கேற்ற சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சண்முகம் உரை யாற்றினார். ஈரோடு வி.பி.சிந்தன் நினைவ கத்தில் குடும்ப மாணவர் சந்திப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர் சங்க மாவட்டத் தலைவர் நவீன் தலைமையில், நடைபெற்ற நிகழ் வில், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சண்முகம், இந்திய மாணவர்  சங்க மாநிலச் செயலாளர் தௌ.சம் சீர், மாவட்டச் செயலாளர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்ற பி.சண் முகம் பேசுகையில், படிப்போம் போராடுவோம், எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்றது இந்திய மாணவர் சங்கம்,  யாருமே கேட்காத காலத்தில் இந்திய மாணவர் சங்கம் மட்டும் தான் கேட்டது. இந்த முழக்கங்கள் என்னை மிகவும் ஈர்த்தது எனவே  நான் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்தேன். நான் அரசு உதவிபெறும் தனி யார் கல்லூரியில் பயின்றேன். அந் தக் கல்லூரியில் பல ஆண்டுகளாக  மாணவர்களிடம் வசூல் செய்து தாளாளரின் பிறந்த நாள் கொண் டாட்டம் நடைபெற்று வந்தது. முத லாண்டு மாணவனான எனக்கு அது  அநியாயமாகப் பட்டது. மாணவர்க ளிடம் அதைப் பகிர்ந்து கொண் டேன். என்ன செய்வதென்று தெரிய வில்லை. ஆனால் தாளாளரின் பிறந்த நாளிற்கு மாணவர்கள் பணம் கொடுப்பதில்லை என்று முடிவு செய்தோம். மாணவர்களின் ஒத்துழைப்பின்மை அவருக்கு மிகப்பெரிய அவமானமாகப்பட் டது. எனவே முதல் எதிரி நான் என்று  நினைத்தார். எனது இறுதியாண் டில் நடைபெற்ற பேச்சுப் போட்டி யில் நான் முதல் பரிசு பெற்றேன். அது பத்திரிக்கையில் செய்தியாக வந்தது. தாளாளரும் என்னை பாராட்டி பரிசு வழங்கினார். அதன் பிறகு அந்த உறவு மாறியது. ஆகவே நமக்கு அநீதி என்று தெரிந் தால் உடனே பாரதி சொன்னதைப் போல ரௌத்திரம் பழக வேண் டும்.  எனது பள்ளிக் காலத்தில் அரசு  பள்ளியைத் தவிர வேறு பள்ளிகள் இல்லை. இன்று புற்றீசல் போல  தனியார் பள்ளிகள் முளைத்துள் ளது. நிரந்தரமான வேலை, மாத சம்பளம், ஓய்வு பெற்றதற்கு பிற கும் பென்சன் உட்பட அனைத்து  சலுகைகளும் பெற சங்கம் வைத் துள்ளனர். தங்களது வேலையை,  எதிர்காலத்தைப் பாதுகாத்துக்  கொள்ளவும் என சங்கம் இல்லாத  பிரிவினரே சமூகத்தில் கிடையாது.  ஒழுங்காகச் சொல்லித் தர தெரி யாத ஆசிரியர்கள் குழந்தைகளை  அடிக்கின்றனர். பெண் குழந்தைக ளுக்கு கழிவறை கிடையாது. அவர் கள் எப்படி இயற்கை உபாதை களைத் தாங்கிக் கொள்ள முடியும்.  இது மனரீதியாக எவ்வளவு உபா தைகளை ஏற்படுத்தும். அவர்கள் மதிப்பெண் வாங்குகிறார்களா? வீட்டுப்பாடம் செய்கிறார்களா என் பதை விட படிக்கும் கல்வி சூழல் எப் படி இருக்கிறது என்பதை பார்க்க  வேண்டும். இதையெல்லாம் தீர்த்து வைப்பதற்கான எல்லாவித முயற்சி களையும் செய்வதற்குத் தான் மாணவர் சங்கம் இருக்கிறது.   75 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் உடுமலை அருகில் முதல்முறையாக ஒரு மலைவாழ் மாணவிக்கு 12ஆம் வகுப்பு பயிலும் வாய்ப்பு கிடைத் துள்ளது. அப்படியெனில் நமக்கு  கிடைத்த வாய்ப்பு இந்த மாநிலத் தில் பல லட்சக்கணக்கான குழந் தைகளுக்குக் கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய சோகம். பள்ளி விடுமுறை என்றால் மாணவர்க ளுக்கு சந்தோசமாக இருக்கும். ஆனால், வாச்சாத்தி கிராமத்தில் பாதிக்ப்பட்ட ஒரு மாணவி பள்ளி  விடுமுறை விடப்படாமல், வேளை  நாளாக இருந்திருந்தால் எனக்கு  அப்படி ஒரு பாதிப்பு நேர்ந்திருக் காது என்றார். இவை போல சமூ கத்தில் நாம் எதிர்கொள்ள வேண் டிய பிரச்சனைகள் உள்ளது.  கோலோச்சும் சாதியப் பாகு பாடு இன்றும் மாவட்ட நீதிபதியாக  இருக்கும் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் தனது சொந்த கிரா மத்தில் தனது பெற்றோர்களுக்கு நல்ல வாடகை வீடு பெற முடிய வில்லை. மாவட்ட நீதிபதியாக இருந்தாலும் சொந்த கிராமத் திலும் இன்னார்தான் என்னும் நிலை  உள்ளது. அதற்கு மேல் ஒரு அடி  எடுத்து வைக்க அனுமதிக்க மாட் டோம் என்கிற முறையில் சாதிய  பாகுபாடு கோலோச்சிக் கொண் டுள்ளது. ஆகவே நாம் செயல்பட வேண்டிய, செல்ல வேண்டிய தூரங்கள் மிக அதிகமாக இருக்கி றது. அந்த இலக்கை நோக்கி பய ணிபோம் என்றார்.