districts

img

யோகா செய்து மாணவர்கள் உலக சாதனை!

நாமக்கல், ஜன.5- குமாரபாளையத்தில் 21 மாணவ, மாணவிகள் யோகா செய்து, உலக சாதனை படைத்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலுள்ள அர விந்த் யோகா மையம் சார்பில், உலக சாதனை நிகழ்ச்சி  ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைப்பா ளர் அரவிந்த் தலைமை வகித்தார். இதில் 21 மாணவ,  மாணவிகள் யோகா உலக சாதனை செய்து அசத்தி னர். இதுகுறித்து அரவிந்த் கூறுகையில், யோகா மையம்  சார்பில் உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, நமது மாணவர்கள் பல்வேறு சாதனை களை படைத்துள்ளனர். தற்போது அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நோபிள் வோர்ல்ட் ரெகார்ட்ஸ் எனும் உலக சாதனை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ் வில் பங்கேற்று அனைவரும் அசத்தியுள்ளனர். போட் டிக்காக மட்டும் நடத்தப்படும் நிகழ்ச்சி யோகா அல்ல.  உடல் ஆரோக்கியத்திற்கும் யோகா ஒவ்வொருவர் வாழ் விலும் அவசியம், என்றார்.