districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

“100 நிமிடத்தில், 100 வாய்ப்பாடுகள்” சேலம் மாணவர்கள் சாதனை

சேலம், ஜன.6- சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “100 நிமிடத்தில், 100 வாய்ப்பாடுகள்” ஒப்புவித்து பள்ளி மாணவர்கள் சாதனை  படைத்தனர். பள்ளி மாணவ, மாணவிகளிடையே கணித திறனை  மேம்படுத்தும் வகையில் சேலம் மாவட்டம், குரங்குச்சாவடி பகுதியில் உள்ள ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியில் 100 நிமிடத்தில் 100 வாய்ப்பாடுகளை ஒப்புவிக்கும் உலக சாதனை  முயற்சி நடைபெற்றது. இதில், இரண்டரை வயது முதல் 10  வயது வரையிலான மாணவ, மாணவிகள் 142 பேர் கலந்து  கொண்டு வாய்ப்பாடுகளை ஒப்புவித்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 100 வாய்ப்பாடுகளை 25  நிமிடத்திற்குள் ஒப்புவித்து சாதனை படைத்தனர். இதன்பின்  மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங் கப்பட்டது. இதேபோல, இந்தியாவில் உள்ள 10 மாநிலங் களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த  வாய்ப்பாடு ஒப்புவிக்கும் உலக சாதனை முயற்சி போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சொத்து வரி செலுத்தாத கடைக்கு சீல்

தருமபுரி, ஜன.6- தருமபுரி நகராட்சி பகுதியில் சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது.  தருமபுரி நகராட்சி பகுதிகளில் சொத்து வரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வியாழனன்று நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி  அலுவலர்கள் சொத்து வரி, கடை வாடகை வசூலிக்கும்  பணியில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள சில கடைகள் சொத்துவரி செலுத் தாமல் நிலுவையில் வைத்திருந்தது. இதனால் சொத்து வரி  நிலுவையில் வைத்திருந்த 6 கடைகளை நகராட்சி அதி காரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

பள்ளி மாணவர் தற்கொலை

ஈரோடு, ஜன. 6- ஈரோடு, முத்தம்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு-முத்தம்பாளையம் பகுதியில் உள்ள இமயம் நகரைச் சேர்ந்த வேலுசாமி-நாகஜோதி ஆகியோர் மகன் கோகுல் (15). இவரது சகோதரன் தீபக் கடந்த 10 வருடங் களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில்  கோகுல் வெள் ளோடு அரசு மேல்நிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து  வந்தார். அரையாண்டு விடுமுறைக்கு பின்பு கடந்த திங்க ளன்று பள்ளிக்கு சென்று வந்தார். பின்னர் தனக்கு கண் வலிப்பதாக கூறியுள்ளார். மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவருக்கு மெட்ராஜ் ஐ வந்து  இருப்பதாகவும், 3 நாட்களுக்கு பள்ளிக்கு செல்ல வேண்டாம்  என மருத்துவர் கூறியுள்ளனர்.  இந்நிலையில், இவரது தாயார் வழக்கம்போல் வேலைக்கு சென்று திரும்பி மாலை வீட்டிற்கு வந்து  கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. சந்தேக மடைந்து அருகாமை வீட்டினர் உதவியுடன் கதவை திறந்த போது, வீட்டின் மேல் கூரையில், சேலையில் தூக்குமாட்டி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். 

பிசியோதெரபி கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டு போட்டி

கோவை, ஜன.6- கோவையில் பிசியோதெரபி கல்லூரிகளுக்கு இடையே யான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியுள்ளது. எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரி மற்றும் பிபிஜி காலேஜ் ஆப் பிசியோதெரபி இணைந்து நடத்தும் பிசியோதெரபி கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் “ஆடுகளம் 2023” என்ற தலைப்பில் கோவை வ.உ.சி மைதா னத்தில் சனியன்று துவங்கியது. இந்த விளையாட்டு போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், தடகளம், கூடைப் பந்து, கபடி, கால்பந்து என 30க்கும் மேற்பட்ட போட்டிகள்  நடைபெற உள்ளது.  தமிழகத்தில் 26 பிசியோதெரபி கல்லூரிகளில் இருந்து  1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விளை யாட்டு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். வரும் ஜன.8  ஆம் தேதியன்று (நாளை) வரை நடைபெறும் இந்த போட்டி களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

கஞ்சா சாக்லேட் விற்பனை: ஒருவர் கைது

சூலூர், ஜன.6- சூலூரில் கஞ்சா சாக்லேட் பதுக்கி வைத் திருந்த பொம்மை கடைக்காரை கைது  செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து ஆறரை கிலோ கஞ்சா சாக்லேட் பாக் கெட்களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக தனிப் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதியில் தனிப் படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த வடமாநில  நபர் ஒருவரை பிடித்து, காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். அப்போது  அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில ளித்துள்ளார். இதன்பின் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் கோல்டன் நிற பேக்கெட் ஒன்று இருந் துள்ளது. அதனை பிரித்து பார்த்தபோது சாக்லேட் வடிவில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்  ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார்  சிங் என்பதும், அங்குள்ள பொம்மை கடை யில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.  மேலும், வட மாநிலங்களிலிருந்து கஞ்சா  வாங்கி வந்து, இப்பகுதியில் உள்ள வடமாநில நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதன்பின் அவர்  மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறை யினர், அவர் பதுக்கி வைத்திருந்த ஆறரை கிலோ எடையுள்ள 32 கஞ்சா சாக்லேட் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

லோன் ஆப் மூலம் பணம் மோசடி கேரளாவைச் சேர்ந்த ஐவர் கைது

திருப்பூர், ஜன. 6 - செல் போன் மூலம் கடன் செயலியை பதிவிறக்கம்  செய்து  உடனடி கடன் பெறலாம் என ஆசை காட்டி பண மோசடியில்  ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த ஐந்துபேரை திருப்பூர் மாவட்ட  சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்  சாய் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:  திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பொங்குபா ளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் 15 ஆம்  தேதி பைசா ஹோம் என்ற கடன்செயலியை தனது செல்போ னில் பதிவிறக்கம் செய்து, ரூபாய் 3000 கடன் பெற்று இருக் கிறார். அந்தக் கடன் தொகையை திரும்ப செலுத்திய பிற கும், அவரது மொபைல் போனுக்கு நீங்கள் கடன் பெற தகுதி  உடையவர் என்று தொடர்ந்து குறுஞ்செய்தி வந்து கொண்டே  இருந்திருக்கிறது. இதையடுத்து அந்த நபர், ஸ்பீடு லோன்  (நைஜீரியா), கேண்டி பே (இந்தோனேசியா), ஈஸி லோன்  (நைஜீரியா) மற்றும் லக்கி மணி(சீனா) ஆகிய செயலிகளை  பதிவிறக்கம் செய்து சுமார் ரூபாய் 15,000 கடன் பெற்று இருக்கிறார். இதைத்தொடர்ந்து கடன் தவணை காலம் முடியும் முன்பே  பணம் செலுத்தச் சொல்லி தொடர்ந்து தனது செல் போனுக்கு குறுஞ்செய்தி வந்து கொண்டே இருந்திருக்கிறது. அத்துடன்  அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாச செய்திகள் அனுப்பப் பட்டு வந்தன. இதையடுத்து பாதிக்கப்பட்டவர், திருப்பூர் மாவட்ட  சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த  புகாரின் மீது விசாரணை நடத்த சைபர் கிரைம் காவல் ஆய் வாளர் சித்ராதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. இவர்களது விசாரணையில், செல்போன் செயலி  மூலம் கடன் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் கூடுதல்  தொகை வசூலிப்பதும் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பு வதுமாக இருந்தவர்கள் காதர் பேட்டை பகுதியில் தங்கியி ருப்பதாக தெரியவந்தது. இவர்கள் சிம் பாக்ஸ் நவீன தொழில் நுட்ப முறையில் இவ்வாறு வாடிக்கையாளர்களை ஏமாற்றி  பணம் பறிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத் தைச் சேர்ந்த முகமது அஸ்கர் (24), முகமது சாபி (36), மலப் புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சலீம் (37), அனீஸ்  மோன் (33) மற்றும் அஷ்ரப் (46) ஆகிய ஐந்து பேரை காவல்து றையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சிம் பாக்ஸ்,  லேப்டாப், மோடம் யுபிஎஸ் பேட்டரி உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் முன்பின் தெரியாத செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து  ஏமாற வேண்டாம் என்றும் காவல் கண்காணிப்பாளர் சசாங்  தெரிவித்தார்.

பெம் பள்ளியில் நாளை கோள்களை காணலாம்

திருப்பூர், ஜன. 6 - திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பெம் பள் ளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைநோக்கி மூலம் கோள்களை காணும் நிகழ்வு நடைபெறுகிறது. இத்தாலிய அறிவியல்  அறிஞர் கலிலியோ கலிலீ 16 10 ஆம் ஆண்டு ஜன.7 ஆம்  தேதி வியாழன் கிரகத்தின்  4 நிலவுகளைக் கண்டுபி டித்து உலகிற்கு வெளியிட்ட  நாளாகும். இதனைக் கொண் டாடும் விதத்தில், தொலை நோக்கி (டெலஸ்கோப்) மூலம் வியாழன் மற்றும் வீனஸ், செவ்வாய், சனி கிர கங்களைப் பார்க்கும் நிகழ்வு  ஜனவரி 7 முதல் 9 வரை தமி ழகமெங்கும் 100 இடங்களில்  நடைபெறவுள்ளது.  இதனை மத்திய அரசின்  விஞ்ஞான் பிரசார், தமிழ்நாடு  தொழில் நுட்ப அறிவியல் மன்றம் சென்னை, திருச்சி அஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன் றவை ஒருங்கிணைக்கின் றன.

அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:50.76/60அடி 
நீர்வரத்து:826கன அடி
வெளியேற்றம்:1023கன அடி
அமராவதி அணை 
நீர்மட்டம்: 87.76/90அடி.
நீர்வரத்து:320கனஅடி
வெளியேற்றம்:829கன அடி

மரத்தில் கார் மோதி விபத்து குழந்தை உள்ளிட்ட 2 பேர் பலி

மேட்டுப்பாளையம், ஜன.6- அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண் டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பெண்  குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படு காயமடைந்தனர். உதகையை சேர்ந்தவர் பிரவீன் (36). இவருக்கு திவ்யா  (28) என்ற மனைவியும், சஞ்சய் பிரதீப், ஆத்யா என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். பிரவீன் தற்போது அவிநாசி பகுதி யிலுள்ள கைகாட்டிபுதூரில் குடும்பத்தினருடன் வசித்து,  கணினி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், அவரது உறவினர் தனது மகன் பிறந்த நாள் விழாவிற்காக பிர வீனை அழைத்துள்ளார். இதனால் பிரவீன் தனது அண்ண னான சுதாகர் (42) என்பவரை அழைத்து அவரின் காரிலேயே  குடும்பத்துடன் உதகைக்கு அழைத்துச்செல்ல கூறியுள்ளார். இதனையடுத்து சுதாகர் தனது காரில் மனைவி பானுபிரியா  (36), மாமியார் வசந்தி (57) மற்றும் பிரவீனின் மனைவி திவ்யா, தாய் ரத்தினம், குழந்தை ஆத்யா உள்ளிட்ட 5 பேரையும் அழைத்துக்கொண்டு உதகை சென்றுள்ளனர். இதன்பின் பிறந்த நாள் விழா முடிந்து வியாழனன்று நள் ளிரவில் அனைவரும் ஒரே காரில் உதகையிலிருந்து புறப் பட்டு மேட்டுப்பாளையம் வந்து, பின்னர் அங்கிருந்து அவிநா சிக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், அன்னூர் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது, சுதாகரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாது. இதில், காரில் பயணித்த 6 பேருமே பலத்த காயமடைந்தனர். இதனைய டுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க ளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், குழந்தை ஆத்யா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், திவ்யா சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று மாலை உயி ரிழந்தார். மேலும், நால்வருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடியில் செங்கரும்பு அறுவடை துவங்கியது

சேலம், ஜன.6- எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் தைப்பொங்கல் பண்டிகை தொடர்ந்து செங்கரும்பு அறுவடை துவங்கியுள்ளது.  பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்குவ தற்காக பூலாம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செங்கரும்புகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு வரு கின்றனர். இதனையடுத்து, கடந்த ஆண்டு ஒரு கரும்பின் விலை 32 ரூபாய்க்கு விலை  போன கரும்பு நடப்பாண்டில் ஒரு கரும்பின்  விலை 18 ரூபாய்க்கு பாதிக்குப் பாதியாக  குறைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை யடைந்து வருகின்றனர். மேலும் 6 அடி உள்ள கரும்பினை மற்றும் அதிகாரிகள் கொள் முதல் செய்வதால் ஐந்து முதல் ஐந்தரை அடி உள்ள கரும்புகளை கூட்டுறவு சங்க அதிகா ரிகள் கழிப்பதால் விவசாயிகள் கடும் வேத னையை அடைந்து வருகின்றனர். மேலும் பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செங்கரும்பு விவசாயிகள் கூடுதல் விலை சேர்த்து தரக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர்: பாஜக தொண்டர் போலீசாரிடம் தஞ்சம்

திருப்பூர், ஜன.6- திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில் வேல் கொலை மிரட்டல் விடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி  உறுப்பினர் காவல் துறையில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம், காளி வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெள்ளியன்று மாவட்ட காவல் கண் காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணை யர் அலுவலகங்களில் புகார் மனு அளித் துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காளிவேலம் பட்டி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (37) கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக உறுப்பி னராக இருந்து வருகிறேன். விவசாய அணி  நகர பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளும் வகித்து வருகின்றேன். தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் தீவிர உறுப்பினராக பணி யாற்றி வருகிறேன்.  மேலும் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்வேல் செய் யும் தவறுகளை சமூக வலைதளங்களில் சுட் டிக்காட்டி வந்தேன். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி மாவட்ட துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ் என்னுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, மாவட்டத் தலை வர் செந்தில்வேல் அழைப்பதாக கூறினார்.  இதையடுத்து கடந்த 5ஆம் தேதி திருப்பூர் வித் யாலயம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு சென்று செந் தில்வேலை சந்தித்தேன். அங்கு சமூக வலை தளங்களில் மாவட்ட தலைவர் செய்த தவறு களை சுட்டி காட்டியது குறித்து எனது விளக் கங்களை கூறினேன். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத மாவட்ட தலைவர் செந்தில்வேல், என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, அடிக்க வந்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.  எனவே இது குறித்து திருப்பூர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு  அளித்துள்ளேன். அது மட்டுமின்றி பாரதிய  ஜனதா மாவட்ட அலுவலகத்தில் எங்களுக் குள் நடந்த உரையாடல் அங்கு இருந்த சிசி டிவி கேமராவில் பதிவாகி இருக்கும். அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  திருப்பூர் பாரதிய ஜனதா வடக்கு மாவட்ட தலைவரின் தவறுகளை சுட்டிக்காட்டிய சக உறுப்பினருக்கு, மாவட்ட தலைவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேலை தொடர்பு கொண்டு கேட்டபோது, எனது கவனத்திற்கு எந்த புகாரும் இதுவரை வரவில்லை, அப்படி ஏதேனும் புகார் வந்தால் எனது வழக்கறிஞர் மூலம் அதனை எதிர் கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

காவல் துறையினர் போட்ட பொய் வழக்கு வழக்கறிஞராக வாதாடிய சிபிஎம் ஊழியர்

ஈரோடு, ஜன. 6- மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழி யர் மீது காவல்துறை பொய் வழக்கு பதிந்த நிலையில் நீதிமன்றத்தில் தானே எதிர்கொண்டு சிபிஎம் ஊழி யர் வாதாடியது அனைவரின் கவ னத்தை ஈர்த்தள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், நஞ்சை கொளாநல்லியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்  பணியிடம் காலியாக இருந்தது.  இதனால், அப்பகுதி மக்கள் பாதிக் கப்படுவதால் கிராம நிர்வாக அலு வலரை நியமிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விதொச சார்பில் மனு கொடுக்கப்பட்டது. மேலும், போராட்ட அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட் சியின் போராட்ட அறிவிப்பைய டுத்து கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டார்.  ஆனால், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காவல்துறையி னர் வழக்கு போட வேண்டும் என் கிற உள்நோக்கத்துடன், அனுமதி யின்றி விளம்பர தட்டி வைத்ததாக சிபிஎம் கொடுமுடி - மொடக் குறிச்சி தாலுகா செயலாளர் கே. பி.கனகவேல் மீது வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு கொடுமுடி நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகி றது. வழக்கின் விசாரணை வியாழ னன்றும் நடைபெற்றது. கிராம நிர் வாக அலுவலர் மற்றும் உதவியா ளர் ஆகிய இருவரும் சாட்சியம் அளித்தனர். அப்போது கூண்டிலி ருந்த கனகவேலிடம் நீதிபதி  உங் கள் வழக்கறிஞர் எங்கே என்று கேட் டார். அதற்கு வழக்கறிஞர் வைக்க வில்லை என்றும், தானே சாட்சி களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வேண்டும் என்றார். சாட் சிகளை குறுக்கு விசாரணை செய்ய கனகவேலிற்கு நீதிபதி அனுமதி அளித்தார். அதன்படி கனகவேல் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தார்.  இந்நிலையில் வழக்கு வரும்  பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக் கப்பட்டது. மக்கள் பிரச்சனைகளுக் காக போராடுபவர்களை பொய்  வழக்குப்பதிவு செய்து அச்சுறுத் தும் நடவடிக்கையை அவ்வப் போது போலீசார் மேற்கொள்கின்ற னர். ஆனால், மக்கள் ஊழியராக உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் இது போன்ற மிரட்டல், உருட்டல்க ளுக்கு ஒருபோதும் அஞ்சாது என் பதை இச்சம்பவம் போலீசாருக்கு மட்டுமல்லாது, அதிகார மமதை யில் உள்ளவர்களையும் கலங்க டித்துள்ளது.

இன்று மின்தடை

கோவை, ஜன.6- மாதாந்திர மின்பராம ரிப்பு பணிகளுக்காக சனி யன்று (இன்று) ஈச்சனாரி துணை மின் நிலையத்திற் குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்ப டும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி, ஈச்சனாரி துணை மின் நிலையத்திற் குட்பட்ட திருமலை நகரில் ஒரு பகுதி, தருண் ரெசி டென்சி, ஈச்சனாரி - செட்டி பாளையம் சாலை, மதுக் கரை சாலை, எம்.எப்.ஏ நகர், பியோன் காலனி, மெகா சிட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.