சேலம், அக்.22- சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையின் 35 ஆண்டு விழா திங்களன்று (இன்று) கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்கு நர் அர்த்தநாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீகோகு லம் மருத்துவமனை கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டு, பலவிதமான சேவைகளை செய்து, வெற்றி நடை போட்டு கொண்டிருகின்றது. உதாரணத்திற்கு ஒருங்கி ணைந்த அதிநவீன ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை, சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலேயே முதன் முதலாக சிசிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன், நவீன ரத்த பரிசோ தனை ஆய்வகம் ஆகிய வசதிகள் உள்ளன. தற்போது இருதய மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்கு தலை சிறந்த மருத்துவ மனையாக ஸ்ரீகோகுலம் மருத்துவமனை திகழ்கிறது. நல்ல தர மான மருத்துவ சேவைகளை சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு, பெரு நகரங்களில் கிடைக்கும் அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை சேலத்திலேயே கிடைக்கும்படி செய்து கொண்டு இருகின்றது, என்றார். முன்னதாக, இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மருத்துவமனை சிறப்பு மருத் துவர்கள் ஜெயதேவ், மோகன், ஜோ மர்ஷேல், விஜய் ஆனந்த் பழனிசாமி, பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.