districts

img

திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

உதகை, ஆக.25- கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி  மூலம் பேரூராட்சி உதவி இயக்குநர் முகமது ரிஸ்வான், உதவி  செயற்பொறியாளர் ராஜா, செயல் அலுவலர் இப்ராஹிம்,  சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் தலைமையில் கோத்த கிரி பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி  பட்டறை ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பொது மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் குப்பைகளை எவ்வாறு  தரம் பிரித்தல், இல்லங்களுக்கே சென்று குப்பைகளை எவ் வாறு வீடுகளில் இருந்து சேகரிப்பது, அதனை வளம்  மீட்பு பூங்காவில் வைத்து மக்கும் குப்பைகள் உரமாகவும், மக் காத குப்பைகள் மறுசுழற்சி எவ்வாறு செய்யபடுகிறது என  செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பொது  கழிப்பிடங்கள் எவ்வாறு முறையாக பராமரிப்பு செய்வது  குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேவர்சோலை, ஓவேலி, சோலூர், நடுவட் டம், கேத்தி, கீழ் குந்தா, அதிகரட்டி, பிக்கட்டி, ஜெகதளா, உலிக்கல் உள்ளிட்ட பத்து பேரூராட்சிகளின் பரப்புரையா ளர்கள், தூய்மை மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மைப்  பணியாளர்கள், பேரூராட்சித் தலைவர் ஜெயக்குமாரி, துணைத்தலைவர் உமாநாத் உட்பட பலர் கலந்து கொண் டனர்.