கோவை, நவ.7- நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்கு அடித்தளமாக சிறு, குறு தொழில்கள் விளங்குவதாக சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். கோவை கொடிசியா வளாகத் தில் சிறு, குறு தொழில் துறை சார் பில், வாங்குவோர் விற்போர் சந் திப்பு நிகழ்வு மற்றும் கண்காட்சி வியாழனன்று துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண் காட்சியை சிறுகுறு தொழில்துறை அமைச்சர் தாமு அன்பரசன் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், இந்நிகழ்வில் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான். எகிப்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனை வோர் பங்கேற்றுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித் தளமாக சிறுகுறு தொழில்கள் இருக்கின்றது. உள்நாட்டு உற்பத்தி யில் 30 சதவீத பங்களிப்பையும், நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்கு தேவையான பங்கினையும் சிறு, குறு தொழில்துறை வகிக் கின்றது. தமிழகம் தொழில்துறை யில் சிறப்பாக இருக்கிறது, உள் நாட்டு உற்பத்தியில் 14 சதவீதம், ஏற்றுமதியில் 19.5 சதவீத்த்துடன் இந்திய அளவில் மூன்றாம் இடத் தில் தமிழகத்தின் சிறு குறு தொழில் துறை இருக்கிறது. தமிழகத்தில் 28 லட்சத்து 42 ஆயி ரம் சிறு குறு தொழில்கள் இருக் கிறது. கடத்த ஜனவரி மாதம் நடை பெற்ற உலக முதலீட்டாளர் மாநாட் டில், ரூ.63 ஆயிரத்து 573 கோடி முத லீட்டில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளது. தமிழகம் சிறு,குறு தொழில்துறையில் முதன்மை மாநிலமாக இருக்கிறது. வாங்கு வோர் விற்போர் சந்திப்பு நிகழ்விற் காக 5 கோடி 94 லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது. உலகம் முழுவதும் சந்தை வாய்ப்பு ஏற்படுத்த வேண் டும் என்பதற்காக, வாங்குவோர் விற் போர் சந்திப்பு நிகழ்வினை தமி ழக அரசு செய்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் தயாரித்து, டாலர் மதிப்பீட்டில் வெளிநாட்டில் சந் தைப்படுத்தும் பொழுது அதிகப்படி யான லாபம் இருக்கும் என்பதால் இந்த வாங்குவோர் விற்போர் சந் திப்பு நடத்தப்படுகிறது. சிறு குறு தொழில் முனைவோர் தங்களது உற்பத்தி பொருளை ஏற்றுமதி செய் யும் வாய்ப்பை பெற்று இருக்கின் றனர். கடந்த ஜனவரி மாதம் சென் னையில் நடைபெற்ற வாங்குவோர் சந்திப்பில், 5 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவிற்கு ஒப் பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. கோவையில் இன்று நடைபெறும் சந்திப்பில் சென்னையை விட அதிக அளவு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். திமுக அரசு பொறுப்பேற்ற பின் சிறுகுறு தொழில் முனைவோர் சார்பில் வெளிநாடுகளில் நடைபெ றும் சந்திப்புகளில் பங்கேற்க 250 நிறுவனங்களுக்கு நிதியை பெற் றுக் கொடுத்திருக்கிறோம். இந்தி யாவில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக இருக்கிறது. நடப்பாண் டில் வளர்ந்து வரும் துறைகளான மின்சார வாகனங்கள், மெட்ரோ கெமிக்கல் உள்ளிட்டவற்றின் ஏற்று மதி அதிகரித்து இருக்கிறது. இந்த ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வித மாக திருப்பூர், கரூர், மதுரை, ஆம் பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை, ஓசூர் ஆகிய 10 இடங்களில் ஏற்று மதி மையங்கள் நிறுவுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது எனவும், ஏற்றுமதியை ஊக்குவித்து, மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக ஏற்றுமதி சார்ந்த பயிற்சி அளித்து, ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை இந்த அரசு வேகமாக செய்து வருகி றது. மோட்டார் பம்ப்செட், கிரைண் டர், தங்க நகை தயாரிப்பு, கயிறு, ஆட்டோமொபைல் உதிரிபாகங் கள் போன்றவற்றில் கோவை மாவட்டம் சிறந்து விளங்கிக் கொண் டிருக்கிறது. செலவம்பாளையம் கிராமத்தில் ரூ.18 கோடி மதிப்பீட் டில் தனியாருடன் இணைந்து தொழில் பேட்டை அமைக்கப்பட்டு வருகிறது. சூலூர் அருகே அறிஞர் அண்ணா தொழில்பேட்டைக்காண வேலைகள் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. குறிச்சி தொழில் பேட் டையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 510 தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு, விரைவில் முதல்வர் திறந்து வைக்க இருக்கின்றார். சின்னவேடம் பட்டியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அலுமினியம் அச்சு வார்ப்பு தொழில் மையம் அமைக் கப்பட்டு வருகிறது. தென்னை நார் கயிறு தொழிலை மேம்படுத்த கோவையை தலை மையிடமாக கொண்டு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. கோவைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வித மாக ரூ.126 கோடி மதிப்பீட்டில் தங்க நகை தயாரிப்பிற்காக NAPL ஆங்கீ காரத்துடன் கூடிய ஆய்வகத்து டன் அடுக்குமாடி வளாகம் கட்டப் படும் என முதல்வர் தெரிவித்துள் ளார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியினை பயன்படுத்தி கொள்ளவும், சென்னை, கோவையை போல தமி ழகம் முழுவதும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை திருச்சி, மதுரை, திரு நெல்வேலி போன்ற நகரங்களில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. 2030 இல் ஒரு ட்ரில்லியன் பொரு ளாதாரம் என்பதை நோக்கி பணி யாற்றி வருதாக தெரிவித்தார்.