நாமக்கல், நவ.20- நாமக்கல் நகரில் நவ.25 ஆம் தேதியன்று கடையடைப்பு நடைபெற உள்ளதென, வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்டத் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலை மையில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாமக்கல் நகரில் பேருந்துகள், சாலையோரங்களில் பய ணிகளை ஏற்றி, இறக்கி விடுவதால் உண்டாகும் போக்கு வரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும். நாமக்கல் நகர பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்லாததை கண்டித்தும், பொதுமக்களுடன் இணைந்து நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மற்றும் 46 இணைப்பு சங்கங்களின் ஆதரவோடு, நவ.25 ஆம் தேதியன்று நாமக்கல் நகரில் கடையடைப்பு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பேரமைப்பின் மாவட்டச் செயலாளர் பொன்.வீரக் குமார், நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் மாணிக்கம், மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், முரளி நன்றி கூறினார்.