districts

img

கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக் கோரிக்கை

திருப்பூர், ஜூன் 13- திருப்பூர் மாநகராட்சி பிச்சம்பாளையம் பகுதியில் கழிவு நீர் கால்வாய், சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றித் தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிச்சம்பாளையம் புதூர் கிளை சார்பில்  சனி யன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. பிச்சம்பாளையம் புதூர் கிளைச் செயலாளர் டி.பொன்னுச் சாமி தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போரட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.பழனிச்சாமி, வடக்கு ஒன் றிய செயலாளர் ஆர். காளியப்பன், மாவட்ட குழு உறுப்பினர்  ஏ.சிகாமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாண்டியன்,  பி.மகேஸ்வரன், ஸ்ரீநகர் கிளை செயலாளர் விஸ்வநாதன், குரு வாயூரப்பன் நகர் மாதர் கிளை செயலாளர் கே.எஸ்.கற்பகம்  ஆகியோர் உரையாற்றினர். இதில், பிச்சம்பாளையம் புதூர்  ஆர்கே.நகர் பகுதியில் மகளிர் சுய உதவி குழு சார்பில் செயல் படும் நியாய விலை கடையை கூட்டுறவு நிர்வாகமே ஏற்று  நடத்த வேண்டும். வாடகை கட்டடத்தில் இயங்கும் இக்க டையை சொந்த கட்டடத்தில் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கேத்தம்பாளையம் சாலை, பிச்சம்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் வேகத்தடை அமைத்திட வேண் டும். புஷ்பா தியேட்டர் முதல் பாண்டியன் நகர் வரை பறக்கும்  பாலம் அமைத்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். பிச் சம்பாளையம் புதூர் புதிய பேருந்து நிலையம் வரை மழை  காலங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற கழி வுநீர் கால்வாய் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. முடி வில் சி.நாகராஜன் நன்றி கூறினார்.