தருமபுரி, செப்.16- தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலு வலகத்தில் அலுவலர்கள் காலிப்பணியிடம் நிலவுவதால், வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு சேவைகள் கிடைப்பதில் குறைபாடு ஏற்பட் டுள்ளது. தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவ லராக உள்ள தாமோதரன் கூடுதல் பொறுப் பாக சேலம் மற்றும் மேட்டூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலராகவும் செயல்பட்டு வருகி றார். இதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தருமபுரி அலுவலகத்துக்கு அவர் வருகிறார். மேலும் பாலக்கோடு, அரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் அவரது பொறுப்பில் செயல்படுகின்றன. இந்நிலையில் இங்குள்ள 3 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். மீதி இரண்டு பணியிடம் காலியாக உள்ளன. எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால் அலுவலகத்திற்கு பழகுநர், ஓட்டுநர் உரிமம் பெற, புதுப்பிக்க, ஆர்.சி, பர்மிட் வாங்க, எஃப்.சி, வாகன ஆய்வுப்பணிகள் உள்ளிட்ட சேவைகளுக்கு வரும் வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. முழுமையான சேவை கிடைத்திட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தரு மபுரி அலுவலகத்தில் மட்டும் முழு நேரம் பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பி விரைவான சேவை வழங்க வேண்டும் என்று வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.