districts

img

செப்.23 ஒன்றிய அரசுக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு

திருப்பூர், செப்.17- 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக திருத்தம் செய்துள்ள ஒன் றிய அரசை கண்டித்து, திருப்பூரில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அனைத்து தொழிற் சங்க கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டம் சிஐடியு மாவட்ட அலுவ லகத்தில் செவ்வாயன்று சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி,  பனியன் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், ஏஐடி யுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி. ஆர்.நடராஜன்,  பனியன் பேக்டரி லேபர் யூனி யன் (ஏஐடியூசி) சங்கத்தின் பொதுச்செய லாளர் சேகர், எல்பிஎப் சங்கத்தின் மாவட்ட  துணைத் தலைவர் ரங்கசாமி, ஹோட்டல் சங்க செயலாளர் மகேஷ், ஐஎன்டியுசி மாவட் டச் செயலாளர் சிவசாமி,  எச்எம்எஸ் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் முத்துசாமி,  எம்எல் எப் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சம்பத்,  பனியன் சங்க செயலாளர் மனோகரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், 2020  ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்திருந்த நிலையில், ஒன்றிய பாஜக  அரசு 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக திருத்தம் செய்துள்ளது. அந்த சட்டம் இன்னும் முழுமையாக அம லுக்கு கொண்டுவரப்படவில்லை. இருப்பி னும்  இதை அமல்படுத்த ஒன்றிய பாஜக அரசு  தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. சட்ட  திருத்தம் அமலுக்கு வந்தால் தொழிலாளர் கள் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்படும் அபாயம் உள்ளது. 8 மணி நேர வேலை நேரம்  என்பது மாற்றப்பட்டு 12 மணி முதல் 14 மணி  நேரம் வரை மாறுவதற்குரிய வாய்ப்புள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒன்றிய பாஜக அரசு இந்த கடுமையான சட் டங்களை அமல்படுத்த முயற்சி மேற் கொண்டு வருகிறது. இத்தகைய தொழிலா ளர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வரும் ஒன்றிய அரசுக்கு  எதிராக வரும் 22 ஆம் தேதி நாடு முழுவதும்  கருப்பு தினமாக கடைபிடிப்பது என்று முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 23 ஆம் தேதி திருப்பூரில் மாலை  குமரன் நினைவகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கருப்பு பேட்ச் அணிந்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.