districts

img

உதகை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

உதகை, ஜன.19- உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற் கொண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பறிமுதல் செய்தனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை  செய்யப்பட்டுள்ளது. அதனையும் மீறி சிலர் இங்குள்ள கடைகளில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, அவ்வப்போது உதகை நகராட்சி அதிகாரிகள் கடைக ளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வது மட்டுமின்றி, அபராதமும் விதித்து  வருகின்றனர்.  இந்நிலையில், செவ்வாயன்று நகர் நல அலு வலர் ஸ்ரீதர் மற்றும் சுகாதார ஆய்வாளர் வைரம் ஆகி யோர் தலைமையில் அதிகாரிகள் கமர்சியல் சாலை யில் உள்ள சில கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட 5 கிலோ  எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறி முதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும், ஹெலிபங்க் பகுதியில் உள்ள ஒரு தனி யார் விடுதி, குப்பைகளை நகராட்சி தூய்மை பணியா ளர்களிடம் ஒப்படைக்காமல், லாரிகள் மூலம் பொது இடத்தில் கொட்டியதற்காக ரூ.1000 அபராதம் விதிக் கப்பட்டது.