districts

img

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி அக்-21,  மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர்களின் ஊதிய உயர்வு உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஸ்கோர் சீட் மார்க் என்ற பெயரில்  ஊதிய பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். பணிவரன் முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தினர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட துணைத்தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.திலக வதி, பொருளாளர் பழனியம்மாள், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்ட  துணைத் தலைவர் சி.முரளி, சி.  அங்கம்மாள், சாலை போக்கு வரத்து சங்க மாவட்டத் தலைவர் பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  கோவை இதேபோன்று, கோவை மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்டத் தலைவர் டி.நாக லட்சுமி தலைமை வகித்தார். மக்க ளைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க  மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மாவட்டச் செயலாளர் வி. இந்திராகாந்தி, மாவட்டப் பொரு ளாளர் ஆர்.அங்கால ஈஸ்வரி உள் ளிட்டோர் உரையாற்றினர்.