districts

img

மதசார்பின்மையே நமது இந்தியா - உறுதியேற்பு

தருமபுரி, பிப்.11- தருமபுரி மறைமாவட்டத்தின் சார்பில் மதச்சார்பின்மையே நமது இந்தியா என்ற தலைப்பில் உரிமை விளக்கக் கூட்டம் தருமபுரி டி.எஸ்.எஸ்.எஸ்.வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மறைமாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ்பயஸ் தலைமை வகித்தார். ஓசூர் ஜெயிண்ட் ஜோசப் பெண்கள் கலை கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்டெல்லா வர வேற்றார். மதுரை சமூக பணி ஆலோ சகர் டென்னிஸ்குமாரி, வழக்கறிஞர் சாகாய பிலமின்ராஜ், சேலம் மறை மாவட்டம் முனைவர் ஜே.விமல், நோயல்ராணி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில், சமூக நல்லிணக்க மேடை நிர்வாகிகள் ஏ.குமார், ஆர்.சிசுபாலன், பொ.மு.நந்தன், சுபேதார், ஷாகின்ஷா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸா மேரி ஆகியோர் பங்கேற்று பேசினர். இதைத்தொடர்ந்து மதசார்பின் மையே நமது இந்தியா என்பதை வலியு றுத்தி உறுதிமொழி ஏற்றனர். முடிவில், அதிபர் அருளகம் பால்பெனடிக் நன்றி கூறினார்.