கோவை, நவ. 11- பாதுகாப்பு உபகரணங்கள் ஏது மின்றி சாக்கடைக்குழிக்குள் இறங்கி, சாக்கடை கழிவுகளை வெறும் கையால் அள்ளி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கணபதி அடுத்த சங்க னூர் சாலை முழுவதும் திங்க ளன்று, சாக்கடை அடைப்புகளை தூர் வாரும் பணிகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. மலக்குழி மரணங்களை தடுத்திட வேண்டும், மலக்குழிக்குள் இறங் கும் சம்பவம் தொடர்ந்தால், சம்பந் தப்பட்ட அதிகாரிகளே பொறுப் பேற்க வேண்டும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தள்ளது. இதுபோன்ற சாக் கடை குழிக்குள் மனிதர்களை இறக்ககூடாது என சட்டம் கடுமை யாக்கப்பட்ட போதும், ரூ.550 கூலிக் காக தூய்மைப்பணி தொழிலா ளர்கள் உயிரை பணயம் வைத்து இப்பணிகளை செய்து வருகின்ற னர். எந்த வித பாதுகாப்பு உபகர ணங்கள் இன்றியும், பாதாள சாக் கடைக்குள் இறங்கி வெறும் கையால் கழிவுகளை அகற்றி வந்த னர். மனிதர்களை இறக்காமல் சாக் கடை அடைப்புகளை சரி செய்ய நவீன இயந்திரங்கள் கோவை மாந கராட்சி தருவித்திருப்பதாக அறி வித்திருந்தது. ஆனால், நடை முறையில் இந்த இயந்திரங்கள் எங் கும் பயன்படுத்துவது போன்றே தெரியவில்லை. இவை அணைத் தும் கண்காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளனவா என்கிற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின் றனர். இதுகுறித்து கோவை மாநக ராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் உடனடி யாக இந்த பணிகள் தடுத்து நிறுத் தப்பட்டது. இருந்தபோதும், மாநக ரத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற அவலம் தொடர்ந்து கொண்டே உள்ளது. கீழ் மட்ட அதி காரிகளுக்கு தெரியாமல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவ தில்லை, தொழிலாளர்களும் அன் றைய நாளுக்கான கூலி கிடைக் கிறதே என்று வேறு வழியின்றி சாக்கடை குழிக்குள் இறங்குகின்ற னர். இதுபோன்ற தொழிலாளர் களுக்கு மாற்று பணிகளை வழங்கி வாழ்வாதாரத்திற்கான உரிய தீர்வை எட்டும் வரை இது போன்ற அவலம் தொடரும் என்பதே பெரும் கவலையாக உள்ளது.