ஈரோடு, ஜூன் 7- ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார பிரிவில் தனியார் மயத் தைக் கண்டித்து புதனன்று தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சி 60 வார்டு களைக் கொண்டது. இதனை, 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட் டுள்ளது. இம்மாநகராட்சியில் பொது சுகாதார பிரிவில் மருத்துவ அலுவலர், சுகாதார செவிலியர், தூய்மைப் பணியாளர் மற்றும் தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர், சுகாதார ஆய்வாளர்கள், ஓட்டு நர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பணி புரிந்து வருகின் றனர். இவர்கள் மக்கும், மக்காத குப்பை சேகரித்தல், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் ஓடைகள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்தாலும், தினக் கூலி ஒப்பந்த தொழிலாளர் களாகவே நீடிக்கின்றனர். இந்நிலையில், இப்பணிகளை தனியாரிடம் விட ஒப்பந்தப் புள்ளி கோரும் அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. இதனைக் கணடித்தும், தனியார் மய முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும் சிஐடியு, ஏஐடியுசி மற்றும் எல்பிஎப் உள் ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மாநக ராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் ஆணையர் அலுவலகம் முற்றுகை யிடப்பட்டது.முற்றுகை போராட் டம் தொடரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத் திற்கு சிஐடியு மாவட்ட தலைவரும், ஈரோடு மாவட்ட ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற தூய்மை பணி யாளர் சங்கத் தலைவருமான எஸ். சுப்ரமணியன் தலைமை ஏற்றார். இதில் எல்பிஎப் எஸ்.கோபால், கிருஷ்ணன், சிஐடியு எஸ்.மாணிக்கம், ஏஐடியுசி சின்னசாமி, மணி, தூய்மைப் பணியாளர் சங்கத் தின் கதிரவன், சக்திவேந்தன், ஆதித்தமிழர் பேரவையின் மாரி யப்பன், விசிக சரவணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இந்நிலையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் முற்றுகை போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடை பெற்றது. அதில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை வரும் 12ஆம் தேதி நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. அதுவரை தூய்மைப்பணி பிரிவில் தனியார்மய நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப் பட்டது.இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.