கோடை விடுமுறை முடிந்து பள் ளிகள் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப் படும் என்ற தமிழக அரசின் அறி விப்பையடுத்து, நாமக்கல் மாவட் டத்தில் கல்வி உபகரணங்கள் விற் பனை சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தேர்வுகள் முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுமார் ஒரு மாத காலம் கோடை விடுமுறை அறி விக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தமி ழக அரசு அறிவித்தது. பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள் ளதால், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஸ்டேஷனரி பொருட்கள், புத்தகங் கள் உள்ளிட்ட கல்வி உபகரணங் களை வாங்க பெற்றோர் அதிக ஆர் வம் காட்டி வருகின்றனர். குறிப் பாக, நாமக்கல்-பள்ளிபாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்டேஷ னரி கடைகளில் பெற்றோர்கள் கூட் டம் நிரம்பி வழிகிறது. விற்பனையாளர்களின் கருத்துகள் இதுகுறித்து கல்வி உபகரணங் கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் வெங்கடேசன் கூறு கையில், “ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்குப் பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைக ளுக்குத் தேவையான ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், ஸ்டேஷனரி பொருட் கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட் களை வாங்க ஆர்வம் காட்டுகின்ற னர். இதில், ஸ்கூல் பேக் வாங்குவ தில் அதிகப் பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போது நாட்கள் குறைவாக இருப்பதால், குழந்தை களுடன் வரும் பெற்றோர் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டேஷனரி பொருட்களை வாங்கிச் செல்கின்ற னர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனி யார் பள்ளி குழந்தைகள் பல்வேறு கார்ட்டூன் வடிவ பொம்மைகள் அடங்கிய ஸ்கூல் பேக், லஞ்ச் பேக்குகளை வாங்குவதில் ஆர் வம் காட்டுகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் இன்னும் அதிகமாக வரும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார். தனது மகனுக்கு ஸ்டேஷனரி பொருட்கள் வாங்க வந்த சாந்தி என்ற பெண்மணி, “எனது மகன் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த போது, ஸ்டேஷனரி பொருட்களை வாங்கித் தருவதில் பெரிதாகத் திட் டமிடல் ஏதும் இல்லை. ஆனால், தற்போது பத்தாம் வகுப்பு கல்வி கற்க உள்ளதால், அவனது வாழ்க் கையைத் தீர்மானிக்கக் கூடிய விஷயமாகக் கல்வி இருப்பதால், அவனை ஊக்கப்படுத்தும் வகை யிலும், உற்சாகமூட்டும் வகையி லும் அவன் கேட்கும் மாடலில், அவன் எண்ணத்திற்கு ஏற்ப பேனா, பென்சில், ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் உள்ளிட்டவற்றை வாங்கித் தருகி றேன். அரசு சார்பில் ஆண்டுதோ றும் மாணவர்களுக்கு இலவசமா கக் கல்வி உபகரணங்கள் வழங் கப்பட்டாலும், எங்கள் தரப்பில் இருந்து இதை வாங்கி கொடுக்கும் போது ஒரு மட்டற்ற மகிழ்ச்சி ஏற் படுகிறது,” என்று தெரிவித்தார். கடைசி நேர கூட்டம் மற்றும் நேர விரயத்தைத் தவிர்க்கும் வகையில் முன்னதாகவே ஸ்டேஷனரி பொருட்களை வாங்க கடைக்கு வந்ததாகவும் அவர் கூறினார். பல்வேறு கடைகளில் பெற் றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஸ்டேஷனரி பொருட்களை வாங்கு வதற்கு ஒரே நேரத்தில் வருவதால் கடைவீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. -எம்.பிரபாகரன்