சேலம், அக். 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட, மேட்டூர்-கொளத்தூர் ஒன்றியச் செயலாளராக எஸ்.வசந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மேட்டூர்-கொளத்தூர் ஒன்றிய 24 ஆவது மாநாடு ஞாயிறன்று, புதுச்சாம்பள்ளி ஒன்றியக் குழு அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில் தோழர்கள் கருப்பண் ணன், வி.ஸ்டாலின், சகுந்தலா ஆகி யோர் தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர் ஜெகநாதன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். காவேரி துரை அஞ்சலி தீர்மானத்தை முன்மொ ழிந்தார், அண்ணாதுரை வரவேற்றார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஏ.இரா மூர்த்தி மாநாட்டை துவக்கிவைத்தார். வேலை அறிக்கை, வரவு செலவு அறிக் கையை ஒன்றியச் செயலாளர் எஸ். வசந்தி முன்மொழிந்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன் வாழ்த்துரை வழங்கினார். இதில், மேட்டூர் நகராட்சி, பிஎன் பட்டி, வீரக்கல்புதூர் பேரூராட்சி பகு தியில் புறம்போக்கு நிலத்தில் குடியி ருக்கும் மக்களுக்கு மனை பட்டா வழங்கிட வேண்டும். புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு மின்வசதி பெறுவதற்காக வீட்டு வரி ரசீது வழங்கிடல் வேண்டும். கொளத்தூர் ஒன்றியத்தில் வசிக்கும் கொண்டாரெட்டீஸ் பழங்குடி மக்களுக்கு பழங்குடியின சான்று வழங் கிடல் வேண்டும். மேட்டூரில் இருந்து சேலத்திற்கு கருமலைக்கூடல், வீரக் கல், நங்கவள்ளி வழிதடத்தில் சென்ற புறநகர பேருந்தை மீண்டும் இயக்கிட வேண்டும். கொளத்தூர் ஒன்றியத்தில் மர்மான முறையில் இறந்த சிறுத்தைப் புலியைக் கொன்றதாக பொய்வழக்கு ஜோடித்து ரிமாண்ட் செய்த செயல் வன்மையாக கண்டனத்திற்குரியது. பொய்வழக்கில் சிறையில் அடைத் துள்ள அப்பாவி மக்களை எவ்வித நிபந் தனையுமின்றி விடுதலை செய்ய வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. மாநாட்டில், 9 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச்செயலாளராக எஸ்.வசந்தி தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஆர்.வெங்கடபதி மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.