தாராபுரம், ஆக. 11 - சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவித்து ஊதியம் வழங்கவேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட 4 ஆவது மாநாடு தாராபுரம் அபூர்வா கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அம்சராஜ்,பொருளாளர் சீனிவா சன் ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர்.அறிக்கையின் மீது நடந்த விவாதத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. புதிய மாவட்ட தலைவராக சீனிவாசன், செயலாளராக எம்.பாலசுப்பிரமணியன், பொருளா ளராக எஸ்.முருகதாஸ், துணை தலைவர்களாக மு.சீனிவாசன், ராணி, ஞானசேகரன், கே.கருணா கரன், இணை செயலாளர்களாக ஆர்.ராமன், எம்.தங்கவேல், திலீப், பி.ரீட்டா, தணிக்கையாளர்களாக சுரேஷ்குமார், ரமேஷ்குமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். cஇம்மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன் னால் மாநிலத்தலைவரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்த மு.சுப் பிரமணியம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட் டங்களை வழிநடத்தியவர் என்ற காரணத்திற்காக பணிஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியி டைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் பழிவாங்கும் இந்த ்நடவடிக்கையை உடனடியாகத் திரும்ப பெற்று பணி ஓய்வு பெறவும், அனைத்து பணப்பலன் களையும் பெற வழிவகை செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனசாக எவ்வித உச்சவரம்பும் இன்றி ஒரு மாத ஊதியத்தை வழங்கவேண்டும். திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத் துவமனை பொதுமக்களுக்கு அனைத்துவிதமான மருத்துவ வசதிகளை வழங்கிடும் பொருட்டு உரிய மருத்துவர்களையும், உரிய மருந்து மற்றும் கருவி தளவா டங்களையும் வழங்கவேண்டும். அனைத்துத்துறை அதிகாரிகளும் வாட்ஸ் அப் முலம் தகவல்களை உடனுக்குடன் அளிக்கவேண்டும் என்ற நெருக்கடியை தளர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. முடிவில் மாவட்ட துணை தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.