சேலம், ஜன.10- 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், என வலியுறுத்தி சாலைப் பணியாளர் கள் சங்கத்தினர் நூதனப் போராட் டத்தில் ஈடுபட்டனர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண் டும். தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், என வலியு றுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங் கத்தினர் வெள்ளியன்று, கருப்புத் துணி முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். நெடுஞ்சாலைத்துறை எடப் பாடி கோட்டப் பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் நிர்வாகி மு.தங்கராசு தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் சுரேஷ் துவக்கவுரையாற் றினார். இதில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கி.தங்கராஜ், கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் க.முத்துக் குமரன், வருவாய்த்துறை அலுவ லர் சங்க மத்திய செயற்குழு உறுப் பினர் ப.சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாலைப் பணி யாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சிங்கராயன் நிறைவுரை யாற்றினார். முடிவில், கோட்டப் பொறியாளர் க.மாரியப்பன் நன்றி கூறினார். கோவை கோவை மாவட்டம், பொள் ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சாலைப் பணியாளர் சங்க கோட்டத் தலைவர் எம்.வெற்றி வேல் தலைமை வகித்தார். கோட் டச் செயலாளர் எஸ்.ஜெகநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். இதில் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.மதியரசன், மண்டலத் தலைவர் கே.பத்மநா பன், மாவட்ட துணைத்தலைவர் பி. சுப்பிரமணியன், வட்டகிளைச் செயலாளர் எம்.கிட்டான் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். முடிவில், கோட்டப் பொருளாளர் வி.சின்ன மாரிமுத்து நன்றி கூறினார். நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகையில் சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் குணா பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாநில பொதுச்செயலாளர் முத்துகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் சிவபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.