districts

img

தாராபுரத்தில் சாலைப் பணியாளர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டம்

திருப்பூர், அக்.23- தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை  கோட்டப் பொறியாளர் அலுவலகத் தில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு சாலைப் பணியா ளர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக புதனன்று உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் சாலைப் பணியாளர் களை தரக்குறைவாக நடத்தும் தாராபுரம் உதவி கோட்ட பொறியா ளரின் நவீன தீண்டாமை செயல்பாட் டிற்கு துணை போகும் கோட்டப் பொறியாளரைக் கண்டித்தும், சாலைப் பணியாளர்களுக்கான முது நிலைப் பட்டியல், தமிழ்நாடு சார்நி லைப் பணியமைப்பு சட்டம் பிரிவு 41(1) அடிப்படையில் முறைப்படுத்தி வெளியிடப்பட்ட பட்டியலின்படி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு அடிப்படையில், சாலைப்  பணியாளர்களில் தகுதி வாய்ந்தவர் களுக்கு இரண்டாம் நிலை சாலை  ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும், இரவு காவலர் அலுவலக  உதவியாளர் பணி மாற்றம், தகுதியா னவர்களுக்கு வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்கள் சாலை பரா மரிப்பு பணியை மேற்கொள்ள கருவி தளவாடங்கள் வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ  காப்பீடு அட்டைகள் பெற்று தர வேண் டும், சாலைப் பணியாளர்களின் ஊதி யத்திலிருந்து பொது சேமநல நிதி (பி.எப்.) க்கு பிடித்தம் செய்த தொகையை உரிய கணக்கில் விரைந்து செலுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று காலை 10 மணி அள வில் தாராபுரம் கோட்டப் பொறியா ளர் அலுவலகம் முன்பாக உள்ளி ருப்புப் போராட்டம் தொடங்கியது. இரண்டு கட்டப் பேச்சு வார்த்தை யில் உடன்படிக்கை ஏற்படாததால், போராட்டம் தொடர்ந்தது. புதன்கிழ மையும் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் நோக்குடன், காலம் கடத்தும் போக்கினைக் கடைப்பிடித்து வரும் கோட்டப் பொறியாளரின் அடாவடி நடவடிக் கையைக் கண்டித்து இப்போராட் டத்தை இரவு பகலாக தொடர்ந்து  நடத்துவது என்றும், கோரிக்கை களை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என சாலைப்  பணியாளர் சங்கத்தினர் அறிவித்து போராடி வருகின்றனர்.