ஈரோடு, ஜூன் 17- சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க கோபி கோட்டம், கவுந்தப்பாடி உட்கோட்ட 8 ஆவது மாநாடு கோபியில் நடைபெற்றது. உட்கோட்ட தலைவர் எம்.பழனிவேலு தலைமை வகித்தார். கோட்ட தலைவர் என்.முருகவேல் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன் வாழ்த்தி பேசி னார். மாநில செயலாளர் எஸ்.செந்தில்நாதன் நிறைவுரை யாற்றினார். 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறி விக்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். விதிகளைத் தளர்த்தி வாரிசு பணி வழங்க வேண்டும். பயணப்படி, சீருடை, சலவைப் படி வழங்க வேண்டும். ஆபத்துப்படி 10 விழுக்காடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக மா.பழனி வேலு, துணை தலைவர்களாக கு.பெருமாள், எஸ்.பழனி சாமி, செயலாளராக பெ.கதிரவன், இணை செயலாளராக ஏ.ஜோதிலிங்கம், பொருளாளராக ஏ.பி.வெள்ளியங்கிரி மற் றும் செயற்குழ உறுப்பினர்களாக கே.தேவராஜ், கவுந்தி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.