districts

img

அதிகரித்து வரும் வேலையின்மை: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ.14- வேலையின்மை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய  பாஜக அரசை கண்டித்து, கோவை யில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். வேலையின்மை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல்  விலை உயர்வு உள்ளிட்ட ஒன்றிய அர சின் மக்கள் விராத கொள்ளைகளை கண்டித்தும், மாநில அரசின் மின் கட் டண உயர்வு, சொத்து வரி உயர்வு  ஆகியவற்றை ரத்து செய்ய வேண் டும் என்றும் தமிழக அரசை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக் குழு சார்பில்  வியாழனன்று சிவானந்தா காலனி யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன் செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் திரளானோர்  பங்கேற்றனர்.