districts

img

நெல் விதைக்கும் பணி தீவிரம்

உதகை, ஜூலை 6- கூடலூரில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக, பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், நீர் நிலை களில் நீர்வரத்து அதிகரித்து, நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது.  இதனால், வயல்களில் நெல் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் வயல்களில் உழவு  பணிகளை மேற்கொண்டு, விதை நெல் விதைக்கும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆடி மாதம், நாற்றுகள் பறித்து  நடவும் பணிகளை துவங்க உள்ளனர். வயல்களில் விதைக்கப் பட்ட விதை நெல்லை பாதுகாக்க, விவசாயிகள் பகல் நேரம்  முழுவதும், கண்காணித்து, சப்தம் மற்றும் சில்வர் தட்டில்  ஓசை எழுப்பி பறவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். கூடலூரில், அதிக அளவில் நெல் விவசாயம் செய்து  வந்தாலும், சம்பந்தப்பட்ட துறை அரசு உதவியும் கிடைக்காத தால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்