districts

img

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

திருப்பூர், செப்.1- திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்  திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களு டனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலை மையில், சனியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங் கில் நடைபெற்றது. இதுகுறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ள லார் தெரிவித்ததாவது, திருப்பூர் மாவட்டத்தில் செயல்ப டுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் செயல்ப டுத்தப்பட்டு வரும் சீர்மிகு நகரத்திட்டம், அம்ரூத் 2.0 திட்டம்,  குடிநீர் திட்டப்பணிகள், நீங்கள் நலமா திட்டம், பேரூராட்சி கள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் நகர்புற  மேம்பாட்டுத் திட்டம், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்து றையின் சார்பில் மக்களைத்தேடி மருத்துவம், கலைஞ ரின் வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை  காப்போம் 48 திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்து றையின் சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், சமூக நலத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்டம், தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக் கப்படவுள்ள தமிழ்புதல்வன் திட்டம் தொடர்பாகவும், 01 முதல்  05 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்,  நியாயவிலைக் கடைகளில் உணவுப்பொருட்களின் இருப்பு குறித்தும், நான் முதல்வன் திட்டம்,  நடைபெற்று வரும் மக்களுடன்  முதல்வர் திட்டம் குறித்தும், போக்குவரத்துத்துறை சார்பில்  கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், கலைஞர் மகளிர்  உரிமைத்திட்டம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில்  செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும் விரி வாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இதில் சம்மந்தப்பட்ட  துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்ப டும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.  இதில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உட்பட அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.