அவிநாசி,அக்.2 அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட, பழங்கரை, கருமபாளை யம், புஞ்சை தாமரை குளம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிக ளில் கிராம சபை கூட்டங்கள் புதனன்று நடைபெற்றது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனியில் நடை பெற்ற கிராம சபையில், பழங்கரை ஊராட்சியினை மாநகராட் சியுடன் இணைக்க கூடாது, இதனால், பல்வேறு வகையில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என மனு அளித்து, மக்கள் நலன் கருதி மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என கிராம சபையில் தீர்மானம் நிறை வேற்ற வலியுறுத்தப்பட்டது. இதனையேற்று கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று, கருமாபாளையத்தில் நடைபெற்ற கிராம சபையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முக சுந்தரம் புகார் அளித்தார். இதில், ஊராட்சி மன்ற செயலர் ராம்கு மார், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரோடு கூட்டு சேர்ந்து முடிவுகளை எடுத்து வருகிறார். பழனியப்பா நகரில் அமைந் துள்ள சுடுகாடு, செந்தூர் கார்டனில் வீட்டுமனை அனுமதி கொடுத்தது, ஸ்டார் சிட்டி மதுபான கடை அமைக்க, கால் வாய் அமைக்கப்பட்டது உள்ளிட்டவைகளில் முறைகேடு நடந்துள்ளது. இதன் மீது விசாரணை மேற்கொள்ள வேண் டும் என புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கிராமசபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புஞ்சை தாமரை குளம் ஊராட்சிக்குட்பட்ட அதி ராம்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஆதி ரம்பாளையத்தில் இருந்து குளத்துக்கு செல்லும் பாதை யினை தனி நபர்கள் ஆக்கிராமித்துள்ளதால், மழை நீர் வீடுக ளுக்குள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் உள்ளிட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்த பின்னர், அளவீடு செய்யும் பணிக்கு வட்டாட்சியர் உத்தரவு மேற்கொண்டனர். இருப்பினும் அதிகாரிகள் அளவீடு செய்யாமல் காலம்தாழ்த்தி வருகின்றனர். இதனைய டுத்து, கிராம சபை கூட்டத்்தில், சிபிஎம் வார்டு உறுப்பினர் குமாரசாமி, மார்க்்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதில், வியாழனன்று ஆக்கிரமிப்பு அகற்றப்படும், வெள்ளியன்று அளவீடு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதேபோன்று, செம்பியநல்லூர் ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் முருகேஷ் 100 நாள் வேலையினை 200 நாளாக உயர்த்த கோரியும், பணியாற்றும் தொழிலாளிக்கு தினக் கூலி ரூ.600 வழங்கக் கோரியும், வேலை அட்டை வைத்துள்ள அனைவ ருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் சண்முகம் வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேசினார்.