கோவை, பிப்.19- பெண்கள் பணிபுரியும் இடங்க ளில் விசாகா கமிட்டி அமைக்க வேண் டும் என வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட இளம்பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் இளம் பெண்கள் அமைப்புக் குழுவின் கோவை மாவட்ட மாநாடு பாரதிபுரம் கே.ரமணி இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீபிகா தலைமை வகித் தார். மாவட்ட துனைச்செயலாளர் நித் யஸ்ரீ வரவேற்புரையாற்றினார். வாலி பர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் அர்ஜூன், பொருளாளர் தினேஷ் ராஜா, மாதர் சங்க மாவட்ட செயலா ளர் சுதா, மாணவர் சங்க மாநில செயற் குழு உறுப்பினர் கயல்விழி ஆகி யோர் வாழ்த்துரையாற்றினர். மத் தியக்குழு உறுப்பினர் பிரியங்கா மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். இம்மாநாட்டில், பெண்கள் பயி லும் பள்ளி மற்றும் கல்லூரி வளா கத்தில் ஐசிசி கமிட்டி அமைக்க வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். பெண்களின் மீதான வழக்குகளை நீதிமன்றங்க ளில் விரைந்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து இளம் பெண்கள் உபக்குழுவின் கன்வீனராக தீபிகா, துணைக்கன்வீனர்களாக கீதாஞ்சலி, நித்யஸ்ரீ உட்பட 11 பேர் கொண்ட உபக் குழு தேர்வு செய்யப்பட்டது. இறுதி யாக, மாவட்டக்குழு உறப்பினர் ஹெயில் மேரி நன்றி கூறினார்.