ஈரோடு, ஜன. 8- உக்கரம் ஊராட்சியில் அடிப்படை வசதி களை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், உக்கரம் ஊராட்சி பகுதியிலுள்ள மக்களின் அடிப்படை வசதிகளான மின்சார வசதி, கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு எடுத்து செல்ல அமரர் ஊர்தி, சம நகரில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் உக்கரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சா.க.அருள் மொழி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத் தின் நோக்கங்களை விளக்கி சிபிஎம் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மாரப் பன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.எம்.விஜ யகுமார், சத்தி தாலுகாச் செயலாளர் எம். முருகன் ஆகியோர் உரையாற்றினர். சத்தி நகரச் செயலாளர் பி.வாசுதேவன், தாலுகா கமிட்டி உறுப்பினர் சுரேஷ், எஸ்.ஏ.ராம் தாஸ், ராஜேந்திரன், ரவி, குமாரசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.