திருப்பூர், பிப்.18- மக்களைத் தேடி மருத்துவத் திட் டத்தில் பணியாற்றிய ஊழியர் பிரியா பணியின்போது ஏற்பட்ட சாலை விபத் தில் உயிரிழந்ததையடுத்து, தமிழக அர சின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மக் களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத் தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை யின் கீழ் இயங்கும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், உடுமலை செல்லப்பம்பாளையம் ஆரம்ப சுகா தார நிலையத்தில் மருத்துவ ஊழியர் பிரியா கடந்த 15 ஆம் தேதி மதியம் பணியின்போது ஏற்பட்ட சாலை விபத் தில் உயிரிழந்தார். எனவே இவரது மர ணத்திற்கு இழப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் திங்க ளன்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர் பிரியா, சடையகவுண்டன் புதூர் நாராயணசாமி நகர் அருகில் கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமாராணியும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயி ரிழந்தார். இறந்துபோன மருத்துவ ஊழி யர் பிரியா மிகவும் வறுமையான குடும் பத்தைச் சேர்ந்தவர். எனவே விபத்தில் மரணமடைந்த பிரியாவின் குடும்பத் திற்கு தமிழக அரசின் நிவாரண நிதியிலி ருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண் டும். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் களின் கடுமையான வேலைப்பளுவை குறைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். முன்னதாக, சிஐடியு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க மாநி லத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, சிஐ டியு மாநிலச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். ஆட்சியர் பரிசீலனை செய்வதாக உறுதி யளித்தார். இதனைத்தொடர்ந்து, சங்க நிர்வாகிகளுடன் பிரியாவின் பெற்றோ ரும் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கையின் மீது அழுத்தம் கொடுத்தனர்.