உடுமலை, ஜூலை 29- நெடுச்சாலைத்துறைக்கு சொந்த மான சாலையோரங்களில் பல ஆண்டு கள் பழமையான பசுமையான மரங்கள் காய்ந்து போவதற்கான காரணத்தை கண்டறிந்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகளின் இரு புறங்களும் பல ஆண்டுகள் பழமையான வேம்பம்மரம், புளியம்மரம் மற்றும் அரசமரம் உள் ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. சில வருடங்களாக இந்த மரங்கள் திடீ ரென்று பட்டுப்போனது (உயிரிழந்து போய்) ஏன் என்று தெரியவில்லை. இத னால் தற்போது சாலைகள் பசுமையி ழந்து காணப்படுவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல வருடங்களுக்கு முன்பு மக்கள் பயன்படும் வகையிலும், இயற்கையை நேசிக்கும் நோக்கத்தில் சாலைகளின் இரண்டு புறங்களிலும் நாட்டுவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந் தன. ஆனால், தற்போது சில சுயநல மனிதர்களின் செயல் மிகவும் வருந்தும் வகையில், மரங்களில் ஓட்டை போட்டு அதில் அமிலத்தை ஊற்றி விடுகிறார் கள். இதனால் மரம் சில மாதங்களில் காய்த்து போய் விடுகிறது. பின்னர் காய்த்த மரத்தை அரசு அனுமதியுடன் வெட்டி விடுகிறார்கள். இதற்கு காரணம் சாலையோரங்களில் உள்ள நிலத்தை வீட்டுமனைகளாவும், புதிதாக பள்ளி, கல்லூரி கட்டுவதற்கும் மற்றும் தொழிற் சாலைகளுக்கு புதிதாக சாலை அமைப் பதற்கும் என்பது தெரியவந்தது. இதுபோன்று சுயநலன் கருதி மரத்தை அழிப்பவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியும், தற்போது வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஒரு மரத்தை வெட்டும் போது புதிதாக மரங்கன்றுகள் நட வேண்டும் என்ற அடிப்படையை கூட அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை. இப்பகுதியில் இப்படி மரத்தை வெட்டும் நிலை நீடித்தால் விரைவில் பசுமையாக இருக்கும் சாலைகள் பாலைவனம் போல் ஆகும் நாள் விரை வில் வரும், என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.