districts

img

நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

உதகை, செப்.4- உதகை அருகே புதர்கள் மண்டி காணப்படும் மூலைக் கடை பேருந்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை, பாதிரிமூலா, அத்திசால், தட்டாம் பாறை உள்பட பல பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடி யிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களும் கொளப்பள்ளி, பந்தலூர், கூட லூர், எருமாடு, தாளூர் உட்பட பல பகுதிகளுக்கு செல்ல  வேண்டுமானால் மூலைக்கடை பகுதிக்கு வந்துதான் செல்ல வேண்டும். இவ்வாறு வந்து செல்லும் பயணிகளும், மாணவ, மாணவிகளும் மூலைக்கடை பயணியர் நிழற்குடையில் பேருந்துக்காக காத்திருப்பர். தற்போது பயணிகள் நிழற் குடை பராமரிப்பின்றி புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இத னால் நிழற்குடையில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதன் காரணமாக நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, அந்த நிழற்குடையை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வ லர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;