உடுமலை, ஆக. 7 - பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சாக்கடையை தூர்வார ஊராட்சி நிர்வாகங் கள் நடவடிக்கை எடுக்காததால், சட்டமன்ற உறுப்பினரிடம் இதுதொடர்பான புகாரை கொண்டு செல்வது என அனைத்து கட்சி கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மடத்துக்குளம் தாலுகா கணியூரிலிருந்து காரத்தொழுவு செல்லும் சாலையில் இருக் கும் பெட்ரோல் பங்க் அருகில் சாலையின் இருபுறமும் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளது. ஜோதம்பட்டி ஊராட்சி மற்றும் கணி யூர் பேரூராட்சியின் எல்லையாக இருக்கும் இப்பகுதியில் இரண்டு ஊர்களின் கழிவு நீரும் சேர்ந்து சுமார் 4 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கி றது. இதனால் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று கணியூர் தனியார் மண்டபத்தில் அனைத்து கட்சி கூட் டம் நடைபெற்றது. இதில், தேங்கி உள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும், இரண்டு ஊராட்சி நிர் வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கா மல் உள்ளனர். சாக்கடை கழிவு நீரை உடன டியாக அப்புறப்படுத்தக்கோரி சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, ஊராட்சி நிர்வாகத்தின் கவ னத்திற்கு கொண்டு செல்வது என்றும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய் யப்பட்டுள்ளது.