கோவை, ஏப்.27- கண்ணம்பாளையம் வேலவன் வில்லாஸ் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் வேலவன் விலாஸ் பகுதியில், பொதுமக்களின் பெரும் முயற்சியால் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது. இந்த மைதா னத்திற்கு பேரூராட்சி சார்பில் மின் இணைப்பும் வழங்கப் பட்டுள்ளது. மேலும், அவ்விடத்தில் கிரிக்கெட் வலைப் பயிற்சி மைதானம் அமைத்து சிறுவர்கள் பயிற்சி பெற்று வரு கின்றனர். இங்கு பயிற்சி பெற்ற மூன்று சிறுவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இந் நிலையில், இங்கு சட்டத்திற்கு புறம்பான தவறுகள் நடப்ப தாக வந்த தவறான தகவலை உண்மை என எண்ணி கிரிக்கெட் வலைப்பயிற்சி மைதானத்தில் பயிற்சி பெறவும், விளையாடவும் தடை செய்ய பேரூராட்சி நிர்வாகம் முயற்சி செய்வதாக தகவல் வருகின்றன. எனவே, இப்பிரச்சரனை யில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். பொது ஒதுக்கீட்டு இடத்தில் உள்ள கிரிக்கெட் வலைப்பயிற்சி மைதானத்திற்கு எந்த இடையூறும் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.