மேட்டுப்பாளையம், டிச.14- மேட்டுப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப் பட்டு வரும் நூற்றுக்கணக்கான சாலையோர மரங்களுக்கு ஈடாக மாற்று மரக்கன்றுகளை நட்டு பராம ரிக்க வேண்டும் என இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். கோவையிலிருந்து மேட்டுப்பா ளையம் வரையிலான சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலான நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சா லைத்துறைக்கு உட்பட்டதாகும். இச்சாலை போக்குவரத்து வசதிக் காக விரிவாக்கம் செய்து நான்கு வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலை யின் அகலம் அதிகரிக்கப்பட்டு விரி வாக்கம் செய்வதால் சாலையின் இருபுறமும் வளர்ந்து நிற்கும் பழ மையான புளியன், வேப்பம், புங் கன் உள்ளிட்ட மரங்களை வெட்டி அகற்றி சாலை அமைத்து வருகின் றனர். இந்த சாலை மேம்பாட்டு பணிக்காக மட்டும் இதுவரை 400க்கும் மேற்பட்ட பெரிய மரங் கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட் டுள்ளன. தற்போது, மேலும் 246 மரங் களை வெட்ட முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்த மான மேட்டுப்பாளையம் -
சத்தி யமங்கலம் சாலையிலும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாய் சாலையில் செல் லும் வாகன புகை மாசை மட்டுப் படுத்தி இவ்வழியே செல்லும் பய ணிகளுக்கு நிழலின் குளிர்ச்சியை தந்து பசுமையாய் காட்சியளித்து கொண்டிருந்த மரங்கள் அடுத்த டுத்து வெட்டப்படுவது இயற்கை நல ஆர்வலர்களை கவலைய டைய வைத்துள்ளது. அதிகரிக்கும் வாகன பயன் பாட்டிற்கு ஏற்ப சாலைகள் விரிவாக் கம் செய்யப்படுவது தவிர்க்க இய லாதது என்றாலும் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக புதிய மரங் களை நட்டு அதனை பராமரிக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைத்துறையினர் கவனம் செலுத்துவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நகர விரிவாக்கம், அதற்கான வளர்ச்சித் திட்ட பணிகள் என ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு, கோவை மாவட்டத்தின் பசுமை பாதிக்கப் பட்டு வரும் நிலையில், நெடுஞ் சாலைத்துறையினர் தாங்கள் வெட் டும் மரங்களுக்கு பதிலாக புதிய சாலையோர மரங்களை நடவும் அதனை முறையாக பராமரிக்கவும் முன்வர வேண்டும் என சூழலியலா ளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.