districts

img

பள்ளத்தில் விழும் வாகனங்கள் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

கோபி, நவ.29- கூகலூர் குளத்துக்கடை பகுதியில், சாலை குறுகிய தாகவும், பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்படாததா லும் பள்ளத்தில் வாகனங் கள் விழுந்து விபத்து ஏற்படு கிறது. உடனடியாக வளைவு சாலைப் பகுதியை விரிவு படுத்தி பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள கூகலூர் குளத்துக்கடை, சுற்றுபுற கிராமங்களின் மையப் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதி வழியாக நாள்தோறும் ஏராளமான பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதில்  கோபி, மேவாணி, கீழ்வாணி உள்ளிட்ட பல் வேறு  பகுதிகளில் இருந்து வரும் வாகனங் கள் பொன்னாச்சிபுதூர், தாழைக்கொம் புதூர், ஒத்தக்குதிரை, கவுந்தப்பாடி ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் கூக லூர் குளத்துக்கடை வளைவில் உள்ள சிறிய பாலத்தின் வழியாக செல்கின்றன. இப்பாலத் தின் வழியக செல்லும் சாலை எஸ் வடிவில் வளைவாக அமைந்துள்ளது. பாலத்தில் தடுப் புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்த போதிலும், சாக்கடை கால்வாய் அமைந்துள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாத்தால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் திரும்பும் போது பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படு கிறது. எனவே, சாக்கடை கழிவுநீர் கலக் கும் பாலப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.